சாவர்க்கரின் சீடர்கள் அல்ல நாங்கள்.. சிறை செல்ல அஞ்சமாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!
டெல்லி: சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர்த் தியாகம் செய்த பகத் சிங்கை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் சிறை செல்ல அஞ்ச மாட்டோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தேர்தல் வெற்றிக்கு பின் ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து பாஜகவை தீவிரமாக ஆம் ஆத்மி எதிர்த்து வருகின்றனர். இதனிடையே டெல்லி துணைநிலை ஆளுநர் - ஆம் ஆத்மி இடையிலான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை குறித்து சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையால் தனியார் மதுபான உற்பத்தியாளர்களும், தனிநபர்களும் அதிக லாபமடைவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவின் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே சிறையில் இருக்கிறார். இதேபோல் விரைவில் கலால்துறை அமைச்சராக இருக்கும் மனீஷ் சிசோடியாவும் கைது செய்யப்படலாம்.
ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் தான் பாஜகவினர். ஆனால் நாங்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைய மறுத்து உயிரை தியாகம் செய்த பகத் சிங்கை பின்பற்றுபவர்கள். எப்போதும் சிறை செல்வதற்கு அஞ்சியதில்லை. ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஆம் ஆத்மி மாபெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. நாங்கள் தேசியளவில் உயர்வதை பாஜகவால் பார்க்க முடியவில்லை. அதனால், அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுக்கின்றனர். ஆனால், இது எதுவும் எங்களைத் தடுக்காது.
நாட்டில் இப்போது ஒரு புதிய அமைப்பு உருவாகியுள்ளது. யாரை சிறைக்கு அனுப்புவது என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள். பிறகு, ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு முன்வைக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications