Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 லோக்சபா தேர்தல்.. காங்கிரஸுடன் கை கோர்க்க ரெடி! ஆம் ஆத்மி அதிரடி! தயக்கம் காட்டும் காங்.! ஏன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடத் தயார் என்று ஆம் ஆத்மி குஜராத் தலைவர் அறிவித்துள்ளார்.

நமது நாட்டில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், இதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

 AAP to fight 2024 polls jointly along with Congress in Gujarat

காங்கிரஸுடன் முரணாக இருந்த திரிணாமுல், ஆம் ஆத்மியும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் "இந்தியா" கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தே எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணி: இதனிடையே அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி குஜராத் பிரிவுத் தலைவர் இசுதன் காத்வி இது குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். "இந்தியா" கூட்டணியில் உள்ள இரு எதிர்க்கட்சிகளும் இணைந்து குஜராத்தில் போட்டியிடும் என அவர் அறிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இசுதன் காத்வி, "ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் "இந்தியா" கூட்டணியில் உள்ளன. குஜராத் மாநிலத்திலும் நிச்சயம் இந்த கூட்டணி இணைந்தே போட்டியிடும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் அடுத்து நடக்கும் லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுவது உறுதி. குஜராத் மாநிலத்தில் சீட் ஷேரிங் செய்து இரு கட்சிகளும் போட்டியிடும்.

இதில் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த முறை குஜராத்தில் 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற முடியாது. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். லோக்சபா தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று இப்போதே தேர்வு செய்யும் பணிகளையும் நாங்கள் தொடங்கிவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ்: ஆம் ஆத்மி இப்படி அடித்துச் சொன்னாலும் கூட காங்கிரஸ் இதில் இன்னும் உறுதியாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. ஆம் ஆத்மியின் குஜராத் தலைவர் இப்படிப் பேசியுள்ளது குறித்து கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்தெல்லாம் டெல்லி தலைமையை முடிவு செய்யும் என்று காங்கிரஸின் மணீஷ் தோஷி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "இப்போது தான் எனக்கு இது குறித்துத் தெரியும்.. சீட் பகிர்வு குறித்து எல்லாம் டெல்லி தலைமை தான் இறுதி முடிவை எடுக்கும்..தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முடிவு செய்வது தான் அனைவருக்கும் நல்லது. இந்த விவகாரத்தில் டெல்லி தலைமை எடுக்கும் முடிவையே குஜராத் காங்கிரஸ் பின்பற்றும்" என்று அவர் தெரிவித்தார்.

பாஜக: இதற்கிடையே இதற்கு பாஜக கடும் பதிலடி கொடுத்துள்ளது.. ஆம் ஆத்மி கட்சியைக் காங்கிரஸின் பி டீம் என்பதையே இது உறுதி செய்வதாகக் குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் ருத்விஜ் படேல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற கூட்டணிக்கு எல்லாம் பயப்படாது.. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பி டீம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்றார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என 3 கட்சிகளும் களத்தில் இருந்தன. இதில் காங்கிரஸ் 17 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் 156 இடங்களில் வென்று மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இப்போது முதல்வராக பூபேந்திர படேல் இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+