அபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிக்சை.... அப்படின்னா? விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டம்
Recommended Video

டெல்லி:டெல்லி ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளனர். 2 நாள் சிகிச்சைக்கு பின்னர்... அது தொடர்பான விவரங்கள் மத்திய அரசு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் விமானப் படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலின் போது இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.
இந் நிலையில், பலர் அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பதாக கூறினார்.

மருத்துவ பரிசோதனை
இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் ராணுவத்தால் உடல் பரிசோதனைக்கு பிறகு அபிநந்தன் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்கள் சிகிச்சை
அபிநந்தனின் முகம், கன்னம் மற்றும் கைகளில் காயம் இருப்பதால் அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதே நேரத்தில் அபிநந்தனின் மனதையும், உடல்நலத்தையும் பேண கூலிங் டவுன் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூலிங் டவுன் சிகிச்சை என்பது... மனதையும், மன நலத்தையும் பேணுவதற்காக அளிக்கப்படும் சிகிச்சையாகும்.

கூலிங் சிகிச்சை
வழக்கமானதாக கருதப்படும் இந்த சிகிச்சை விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்படும். அபிநந்தனுக்கு அளிக்கப்பட்ட இந்த சிகிச்சையில் அவர் முன்னேற்றம் அடைந்தாரா..? அவரது உடல் மற்றும் மனநிலை எவ்வாறு உள்ளது என்ற விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

மனநல சிகிச்சை
அதனை தொடர்ந்து அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications