அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு! காங்கிரசும் சப்போர்ட்
டெல்லி: விங் கமான்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் லோக்சபை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை கேட்டுக் கொண்டதை அடுத்து தமிழக இளைஞரின் மீசை இனி தேசிய அளவில் பிரபலமாகும் என்பது பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமாவில் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் படையை சேர்ந்த 40 பேர் பலியாகிவிட்டனர். இது உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது வான் வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

விமானங்கள்
இந்திய- பாகிஸ்தான் வான் எல்லையில் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் விமான படையினர் இந்தியா மீது தாக்குதல் நடத்த சென்ற போது அவர்களது விமானத்தை இந்திய மிக் ரக விமானங்கள் புறமுதுகிட்டு ஓட செய்தன.

பாகிஸ்தான் எல்லை
இந்த செயலின்போது இந்திய விமானத்தின் மீது பாகிஸ்தான் விமான படை துப்பாக்கியால் சுட்டது. அப்போது இந்திய விமான படையின் விங் கமான்டர் அபிநந்தன் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தபோது பாகிஸ்தான் எல்லையில் விழுந்துவிட்டார்.

அழுத்தம்
அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. பின்னர் ஒரு வாரத்துக்கு பிறகு இந்தியா, உலக நாடுகள் கொடுத்த அழுத்ததத்தின் பேரில் அவரை இந்திய அரசிடம் ஒப்படைத்தது.

தேசிய மீசை
இந்த நிலையில் அபிநந்தனின் வீரத்தை பாராட்டும் வகையில் அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

பேசப்படும்
அபிநந்தனை சிறை பிடித்தவுடன் அவரது மீசைதான் மிகவும் பிரபலமாகவும் பேசும் பொருளாகவும் இருந்தது. அவர் சிங்கம் 2 படத்தில் சூர்யாவை வைத்திருந்ததை போல் அபிநந்தனும் மீசை வைத்திருக்கிறார். இதனால் சூர்யாவின் தைரியத்தையும் அபிநந்தனின் வீரத்தையும் தமிழர்கள் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டனர். இந்த படத்தில் சூர்யாவின் மீசையை பார்த்து சந்தானம் எர்றா (இறால்) மீசை என்றே அழைப்பார். இத்தகைய மீசை நேற்று தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஒரு வேளை தேசிய அங்கீகாரம் கிடைத்தால் அது இந்திய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications