லோக்சபாவுக்கு வராத திமுக எம்பி எஸ்ஆர் பார்த்திபன் சஸ்பெண்ட்- கொந்தளிப்பால் பின்வாங்கிய மத்திய அரசு!
டெல்லி: நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இன்று பங்கேற்காத திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலில் இருந்து எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் நீக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று திடீரென சிலர் உள்ளே நுழைந்து புகை குப்பிகளை வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லோக்சபாவுக்குள்ளும் நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதனை முன்வைத்து இன்று லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனையடுத்து ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லோக்சபாவில் முதலில் ஜோதிமணி உள்ளிட்ட 5 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் கனிமொழி உட்பட மேலும் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் 15 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
A total of 13 MPs have been suspended from the Lok Sabha today.
— ANI (@ANI) December 14, 2023
SR Parthiban's suspension was revoked after he was mistakenly suspended. pic.twitter.com/3wCxOI9NJK
இந்த நிலையில் லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பிக்களில் திமுகவின் எஸ்.ஆர். பார்த்திபன் எம்பி பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவே இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்திருந்தார். இதுவும் புதிய சர்ச்சையாக வெடித்தது. லோக்சபாவில் இல்லாத ஒரு எம்பி, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி எப்படி சஸ்பெண்ட் செய்ய முடியும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டது. மொத்தம் 13 எம்.பிக்கள் மட்டுமே லோக்சபாவில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இப்பட்டியலில் இருந்து எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் நீக்கப்பட்டுவிட்டது என்றார். இதனால் இந்த சர்ச்சை ஓய்ந்தது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications