"ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை!" ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.. ஏபிவிபி சாடல்
ஜேஎன்யூ தாக்குதல் விவகாரம் குறித்து ஏபிவிபி ட்விட்டரில் பரபர கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
மும்பையில் ஐஐடியில் படித்து வந்த 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி, கடந்த 12 ஆம் தேதி ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சொலான்கியுடன் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊர்வலம்
இதற்கிடையே சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி டெல்லியில் இருக்கும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் நேற்று ஊர்வலம் சென்றனர். இந்த பேரணியில் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் தலைவர்களின் படங்களுடன் மாணவர்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் அங்குப் படிக்கும் தமிழ் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி ஷிவாஜியின் படம் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல்
இந்த விவகாரத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினரான ஏபிவிபி அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கு வைக்கப்பட்ட தந்தை பெரியார் படமும் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

முதல்வர் கண்டனம்
மேலும், தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், அதை மறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டரில், "பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி கற்கும் இடங்கள் மட்டுமல்ல. ஆலோசனை நடத்தவும், விவாதம் நடத்தும் இடம் அவை. தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினரின் கோழைத்தனமான தாக்குதலையும் கண்டிக்கிறேன். பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களைச் சேதப்படுத்தியதை நான் கண்டிக்கிறேன். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை" என்று பதிவிட்டிருந்தார்.

ஏபிவிபி பதிலடி
இதற்கிடையே இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து ஏபிவிபி அமைப்பினர் கருத்து கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் ட்விட்டரில், "ஸ்டாலின் ஜேஎன்யுவில் நேற்றிரவு நடந்த சம்பவத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறார். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் பரிதாப நிலை குறித்தும் அவருக்குத் தெரியவில்லை. நேற்றிரவு ஜேஎன்யுவில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் படம் மட்டும்தான் ஜேஎன்யு அர்பன் நக்சல்கள் மூலம் சேதப்படுத்தப்பட்டது" என்று பதிவிட்டுள்ளனர்.

ஜேஎன்யூ பதிவாளர்
முன்னதாக தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து ஜேஎன்யூ பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ஜேஎன்யூ வளாகத்தில் தேசிய தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பான ஒரு தகவல். பன்முகத்தன்மை, நல்லுறவுக்கு எதிராக நடந்து கொள்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்












Click it and Unblock the Notifications