நிர்மலா சீதாராமன் குட்நியூஸ்.. இனி வருமான வரி விதிக்கப்படாது.. விபத்து இழப்பீடு அடியோடு மாறுது
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இன்று அறிவித்த விபத்து காப்பீடு தொடர்பான ஒரு அறிவிப்பு மிகப்பெரிய நன்மையை பொதுமக்களுக்கு வழங்க போகிறது. விபத்து இழப்பீட்டுத் தொகைக்கான 'வட்டி'க்கு இனி வருமான வரி விதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீடு தொடர்பான ஒரு பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தால் , பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான 'வட்டி'க்கு இனி வருமான வரி விதிக்கப்படாது என்றும், அந்த வட்டித் தொகையில் இனி டி.டி.எஸ் பிடிக்கப்பட மாட்டாது என்றும் நான் முன்மொழிகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.

அறிய வேண்டியவை:
பொதுவாக, ஒரு விபத்து நடந்தால் அதற்கான இழப்பீடு கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகிறது. நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் போது, அந்த இடைப்பட்ட காலத்திற்கான வட்டியையும் சேர்த்து வழங்கும்.
முன்பு இருந்த நிலை
விபத்துக்கான அசல் இழப்பீட்டுத் தொகைக்கு வரி கிடையாது. ஆனால், அந்தத் தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும். மேலும், அந்த வட்டித் தொகை ₹50,000-க்கு மேல் இருந்தால், நீதிமன்றமே 10% TDS பிடித்துக் கொண்டுதான் மீதிப் பணத்தைத் தருவார்கள்.
புதிய அறிவிப்பு
இனி விபத்து இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து வரும் வட்டி முழுமைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இனி வட்டித் தொகையில் ₹1 கூட TDS பிடிக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய முழுத் தொகையும் எந்தப் பிடித்தமும் இன்றி கைக்கு வரப்போகிறது,
விபத்தால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் பெற வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையில் வரியைக் குறைப்பது ஒரு பெரிய மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
டேர்ம் இன்சூரன்ஸ்
விபத்து காப்பீடு ஒருபுறம் எனில், டேர்ம் இன்சூரன்ஸ் போடுவதும் நல்லது. நீங்கள் வருடத்திற்கு வெறும் ₹10,000 முதல் ₹15,000 வரை கட்டினால் கூட, உங்கள் குடும்பத்திற்கு ₹1 கோடி வரையிலான பாதுகாப்பு கிடைக்கும்.இது சேமிப்புத் திட்டம் அல்ல. எனவே, பாலிசி கால முடிவில் நீங்கள் உயிருடன் இருந்தால் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது. அதேநேரம் நீங்கள் கட்டும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். கூடுதல் பிரீமியம் செலுத்தி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் (Critical Illness) அல்லது விபத்து மரணம் ஆகியவற்றுக்குக் கூடுதல் கவரேஜ் சேர்த்துக்கொள்ள முடியும்.
உங்கள் வருமானத்தை நம்பி உங்கள் குடும்பம் (மனைவி, பிள்ளைகள், பெற்றோர்) இருக்கிறது என்றால், நீங்கள் கண்டிப்பாக ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். குறிப்பாக வீட்டுக்கடன் (Home Loan) அல்லது பிற கடன்கள் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.












Click it and Unblock the Notifications