இந்தியாவில் 262 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்..கேரளாவில்தான் மிக அதிகம்!
டெல்லி: இந்தியாவில் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,42,826 ஆக உள்ளது. கடந்த 262 நாட்களில் இதுதான் மிக குறைவான கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஆகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 3,43,66,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 266 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,61,057 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் 13208 பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தமாக 3,37,63,104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை புதிய கேஸ்களை விட அதிகம் இருந்த காரணத்தால் ஆக்டிவ் கேஸ்கள் 262 நாட்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.

கேரளா
இந்தியாவில் அதிகமாக நேற்று கேரளாவில் 7,124 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று கேரளாவை 201 பேர் பலியானார்கள். இதனால் கேரளாவில் பலி எண்ணிக்கை 33,716 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயேகேரளாவில் தான் அதிகபட்சமாக 72,932 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அதாவது இந்தியாவில் மொத்த ஆக்டிவ் கேஸ்களில் 50 சதவிகிதம் கேரளாவில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா
உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில்தான் 9,228,410 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். யு.கேவில் 1,565,905 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ரஷ்யாவில் 986,303 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். உக்ரைனில் 494,988 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

துருக்கி
துருக்கியில் 450,548 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ரஷ்யா, துருக்கி, உக்ரைனில் கடந்த 1 மாதமாக தினமும் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவானதால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் 775,218 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 609,484 பேர் பலியாகி உள்ளனர்.

மரணம்
இந்தியாவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் 289,734 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 246,814 பேர் பலியாகி உள்ளனர். பெருவில் 200,438 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications