ஒரே நாளில் பிறந்ததினம்: 2ம் வகுப்பு படிக்கும்போது கடிதம் எழுதிய விவேக்.. பதில் போட்ட இந்திரா காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனக்கும் இந்திரா காந்திக்கும் ஒரேநாளில் பிறந்ததினம் என 2ஆம் வகுப்பு படித்த போது நடிகர் விவேக் எழுதிய கடிதத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பதிலளித்துள்ளார். அதை விவேக்கும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

சின்ன கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக், நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி அருள்செல்வியும், இரு மகள்களும் உள்ளனர்.

நகைச்சுவை

நகைச்சுவை

தனது சமூக கருத்துகள் மூலம் நகைச்சுவையை கொடுத்த இந்த மாமனிதரின் காரிலும் வீட்டிலும் விவேகானந்தரின் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அது போல் அப்துல் கலாம் மீதான பற்றால் அவர் கூறிய படி 1 கோடி மரங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதுவரை 33 லட்சம் மரங்களை அவர் நட்டுள்ளார்.

கடிதம்

கடிதம்

அது போல் பட்டு போன மரங்களுக்கு புத்துயிரும் அளித்துள்ளார். அத்தகைய கலைஞன் விவேக் தான் 2ஆவது படிக்கும் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் படித்த போதுதான் இந்திராவுக்கு கடிதம் எழுதி அதற்கான பதில் கடிதத்தையும் பெற்றுள்ளார்.

பத்திரப்படுத்திய விவேக்

பத்திரப்படுத்திய விவேக்

அந்த கடிதத்தில் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவரது தந்தையின் ஒப்புதலோடு எழுதியதில், தனக்கும் இந்திரா காந்திக்கும் ஒரே நாளில் பிறந்த தினம் (நவம்பர் 19) என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்திற்கு இந்திரா காந்தி தனது கைப்பட எழுதிய பதில் கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகர் விவேக்.

பதில்

பதில்

கடந்த 1969 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜய் பள்ளியில் 2ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் விவேக். இந்த பள்ளியின் முகவரிக்கே இந்திரா காந்தியும் பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+