அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு!
அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
டெல்லி: அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேசிய அளவில் அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக நேற்று ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடுத்த அவதூறு வழக்கை அனில் அம்பானி திரும்பப் பெற்றார். 5000 கோடி ரூபாய் கேட்டு அவர் தொடுத்த வழக்கை அவர் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
பொதுவாக கடந்த இரண்டு வருடங்களாக காங்கிரஸ் கட்சியும் ரிலையன்ஸ் குழும தலைவர் ஆனால் அம்பானியும் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் ரபேல் வழக்கில் அனில் அம்பானியை ராகுல் காந்தி நேரிடியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கு எதிராக அம்பானி தொடுத்த அவதூறு வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
''தி வயர்'' செய்தி நிறுவனம் செய்தி நிறுவனம் பாஜக குறித்தும், குஜராத் அரசு குறித்தும், அதானி நிறுவனம் மோசடி செய்தது என்றும் குற்றச்சாட்டு வைத்து நிறைய கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. இதற்கு எதிராக அதானி அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் அனைத்து விதமான அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தற்போது அதானி அறிவித்து உள்ளார். இது பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அனில் அம்பானி, அதானி இருவரும் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications