அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு!
அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
டெல்லி: அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேசிய அளவில் அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக நேற்று ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடுத்த அவதூறு வழக்கை அனில் அம்பானி திரும்பப் பெற்றார். 5000 கோடி ரூபாய் கேட்டு அவர் தொடுத்த வழக்கை அவர் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
பொதுவாக கடந்த இரண்டு வருடங்களாக காங்கிரஸ் கட்சியும் ரிலையன்ஸ் குழும தலைவர் ஆனால் அம்பானியும் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் ரபேல் வழக்கில் அனில் அம்பானியை ராகுல் காந்தி நேரிடியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கு எதிராக அம்பானி தொடுத்த அவதூறு வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
''தி வயர்'' செய்தி நிறுவனம் செய்தி நிறுவனம் பாஜக குறித்தும், குஜராத் அரசு குறித்தும், அதானி நிறுவனம் மோசடி செய்தது என்றும் குற்றச்சாட்டு வைத்து நிறைய கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. இதற்கு எதிராக அதானி அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் அனைத்து விதமான அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தற்போது அதானி அறிவித்து உள்ளார். இது பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அனில் அம்பானி, அதானி இருவரும் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications