Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எச்சரித்த உளவுத்துறை.. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

After Intelligence report Union Home Ministry gives Z category security for Chief Election Commissioner Rajiv Kumar

இந்த லோக்சபா தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதாவது ராஜீவ் குமாரின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து தான் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல் ராஜீவ் குமாருக்கு உள்ளது? எந்த அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளது? என்பன போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை 2029ல் கொண்டு வரலாம்! பரிந்துரை செய்யும் சட்ட ஆணையம் - பரபர தகவல்


இருப்பினும் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களை மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக கூட ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய தேர்தல் ஆணையராக தேர்வான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து.. யார் இவர்கள் தெரியுமா? முழு பின்னணி


மேலும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பல்வேறு மாநிலங்களுக்கு ஆய்வுக்காக செல்லலாம். குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட நக்சலைட், மாவோயிஸ்ட் நடமாடும் மாநிலங்களுக்கும் கூட அவர் பயணிக்கலாம். இதனால் கூட ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தற்போது ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருடைய பாதுகாப்பு பணியில் 33 பேர் ஈடுபட உள்ளனர். இதில் சிஆர்பிஎப் காமாண்டோக்களும் அடங்குவார்கள். இதில் துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களும் அடங்குவார்கள். இந்த 33 பேரில் ஒரு பகுதியினர் ராஜீவ் குமாரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மற்றபடி 6 வீரர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 18 பேர் 3 ஷிப்டுகளில் ராஜீவ் குமாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+