வடகிழக்கு மாநிலங்களுக்கு சீனா குறி... போர் விமானங்கள், டிரோன்கள் குவிப்பு- பயங்கர சதிக்கு ஸ்கெட்ச்?
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு குறிவைத்து அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா போர் விமானங்கள், டிரோன்களை பெருமளவு குவித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்களை முன்வைத்து என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறிய சம்பவம் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட்ட போதும் சாதாரண அத்துமீறலாக இதனைப் பார்க்க முடியாது என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து.

வடகிழக்கு மாநிலங்கள்
இது தொடர்பாக என்டிடிவிக்கு கிடைத்த செயற்கைக் கோள் படங்களில் திபெத்தின் முக்கிய விமான படை தளங்களில் போர் விமானங்கள், டிரோன்களை சீனா குவித்து வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். இவை அனைத்துமே நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்தே குவிக்கப்பட்டிருக்கின்றனவாம். அருணாச்சல பிரதேச எல்லையில் நமது போர் விமானங்கள் ரோந்து பணியில் அண்மையில் ஈடுபட்டிருந்தன. இதற்கு காரணமே சீன போர் விமானங்கள் அத்துமீறி நமது எல்லைக்குள் பறந்ததுதானாம்.

10 மணிநேரம் பறக்கும் டிரோன்கள்
அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது சீனாவின் Bangda விமான படை தளம். செயற்கைக்கோள் படங்களின் படி இடைவிடாமல் 10 மணிநேரம் தொடர்ந்து பறக்கக் கூடிய WZ-7 'Soaring Dragon டிரோன்கள் அங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளனவாம். உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த டிரோன்களை சீனா வடிவமைத்திருக்கிறது.

போர் விமானங்கள்
இது தொடர்பாக இந்திய ராணுவத்துக்கு டிரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவன தலைவரான முன்னாள் விமான படை விமானி சமீர் ஜோஷி கூறுகையில், இந்திய நிலைகளை கண்காணிக்கவே சீனா டிரோன்களை தயாரித்துள்ளது. சீனா விமானப் படையின் ஒரு அங்கமாகவே டிரோன்கள் செயல்பட்டு வருகின்றன என்கிறார். டிசம்பர் 14-ந் தேதி Bangda விமான படை தளத்தில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த செயற்கைக் கோள் படங்கள் கிடைத்திருக்கின்றன.

2 ஆண்டுகளாக அதிகம்
பொதுவாக 2020-ம் ஆண்டு கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா வான்படையின் செயல்பாடு மிக மிக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் போர் விமானங்கள், ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் சீனாவின் செயல்பாடுகள் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications