Sudarshan Reddy: துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி.. இந்தியா கூட்டணியின் சுதர்சன் ரெட்டி சொன்னது என்ன?
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் 300 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவிய இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி(Sudarshan Reddy), தேர்தலில் தோல்வியடைந்தாலும் சித்தாந்த ரீதியிலான போர் அதிக வீரியத்துடன் தொடரும் என்று கூறியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷும், இந்தியா கூட்டணிக்கு கடந்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணமாகக் காட்டி கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 15-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி (நேற்று) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி
இந்த தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் இருமுனை போட்டி உறுதியானதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஆதரவு திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சுதர்சன் ரெட்டி கருத்து
வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்ததும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக கூட்டணியின் சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தோல்வி குறித்து சுதர்சன் ரெட்டி கூறியதாவது: "முடிவு எனக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சிகள் கூட்டாக முன்னெடுத்த குறிக்கோள் மங்காமல் இருக்கும். சித்தாந்தப் போர் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும். நமது குடியரசின் ஜனநாயக செயல்முறைகளில் நிலையான நம்பிக்கையுடன் இந்த முடிவை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது
இந்த பயணம் எனக்கு மிகச் சிறந்த கவுரவமாகும். நமது ஜனநாயகம் வெற்றியால் மட்டுமே வலுப்பெறாது; உரையாடல், கருத்து வேறுபாடு மற்றும் பங்கேற்பு உணர்வாலும் வலுப்பெறும். சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக ஒரு குடிமகனாக நான் உறுதியாகத் தொடர்ந்து நிற்பேன். நமது அரசியலமைப்புச் சட்டம், நமது தேசிய வாழ்வின் வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து இருக்கட்டும்."
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:- கடந்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலை விட இந்த முறை இந்தியா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி வேட்பாளர் 26 சதவீதம் வாக்குகளை பெற்றார். இம்முறை 40 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications