பிரதமர் மோடிக்கு ரூ.420 அனுப்பும் ஆம்ஆத்மி.. எல்லாரும் வாங்க என அழைப்பு.. ஓ காரணம் இதுதானா?
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு பணம் இல்லை என கூறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.420 அனுப்பி அக்னிபாத்தை கைவிடக்கோரி நூதன போராட்டத்தை நடத்த ஆம்ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
இந்திய பாதுகாப்பில் முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஆள்சேர்ப்புக்கான புதிய திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 4 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் முப்படையில் இணைந்து சேவையாற்ற முடியும்.
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அக்னிபாத் போராட்டம்
குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா, ஜார்கண்ட் உள்பட பல மாவட்டங்களில் கடந்த மாதம் போராட்டங்கள் வெடித்தன. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டு, ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் இறந்தார். தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
இருப்பினும் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஆத்மி சார்பில் நூதன போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மோடிக்கு ரூ.420 அனுப்பி போராட்டம்
அதன்படி அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், அடையாள போராட்டமாகவும் ஆம்ஆம்தி கட்சியினர் ரூ.420க்கான காசோலை(செக்), வரைவோலைகளை(டிடி) பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப உள்ளனர். இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியின் உத்தர பிரதேச மாநில பொறுப்பாளரும், எம்பியுமான சஞ்சய் சிங் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம்
பிரதமர் நரேந்திர மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி அரசுக்கு ரூ.420 காசோலை, டிடி அனுப்ப உள்ளோம். பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம். நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம்.

பாஜகவின் கைப்பாவை
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைப்பாவையாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கண்ணையா லால் கொலையில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்பான ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்ச்சின் பங்கு உள்ளது'' என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications