தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: சினிமா பாணியில் விமானத்தின் கழிவறையில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.27 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அகமதாபாத் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாயிலிருந்து அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை இண்டிகோ விமானம் (6E-1478) வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Ahmedabad Gold Smuggling

இதனைத் தொடர்ந்து, விமானப் பொறியாளர்களின் உதவியுடன் அதிகாரிகள் விமானத்திற்குள் அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தினர். அப்போது, விமானத்தின் முன்பகுதியில் உள்ள கழிவறையில் (Lavatory) இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் அதிகாரிகளின் சந்தேகத்தைத் தூண்டியது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது, கருப்பு நிற பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்ட இரண்டு பைகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

24 காரட் சுத்தத் தங்கம்

அந்தப் பைகளைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 24 காரட் சுத்தமான, வெளிநாட்டு முத்திரை பதிக்கப்பட்ட 24 தங்கக் கட்டிகள் இருந்தன. மொத்தம் 2,799.3 கிராம் (சுமார் 2.8 கிலோ) எடையுள்ள இந்தத் தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 4.27 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உரிமை கோராத மர்மப் பொட்டலம்: இந்தத் தங்கம் யாருடையது என்பது குறித்து விமானப் பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், அந்தப் பொட்டலத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை.

1962-ம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ், கடத்தல் நோக்கத்திற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தத் தங்கம் 'உரிமை கோரப்படாத சொத்து' என வகைப்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நூதனக் கடத்தலில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் கடத்தல் வேட்டை - சிகரெட் பறிமுதல்: அகமதாபாத் விமான நிலையத்தில் கடந்த சில வாரங்களாகவே கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்த இரு பயணிகளைச் சோதனையிட்டபோது, அவர்களிடம் இருந்து 1.13 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எக்ஸ்-ரே சோதனையில் சிக்கிய அவர்களது உடமைகளைச் சோதித்தபோது, 'மாண்ட்' (Mond) பிராண்டின் 56,000 சிகரெட்டுகளும், 'குடாங் கரம்' (Gudang Garam) பிராண்டின் 57,200 சிகரெட்டுகளும் கண்டறியப்பட்டன.

துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது சமீபகாலமாகப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. முன்னதாக எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து கடத்தப்பட்ட தங்கம், தற்போது விமானத்தின் பாகங்களிலேயே மறைத்து வைக்கப்படும் அளவிற்கு கடத்தல்காரர்கள் துணிச்சலாகச் செயல்படுகின்றனர்.

விமான நிலைய ஊழியர்கள் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவி இன்றி இத்தகைய கடத்தல்கள் சாத்தியமில்லை என்பதால், சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+