அகமதாபாத் விமான விபத்து.. இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் அறிவிப்பு!
டெல்லி: அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரூ.1 நிவாரணத்துடன் இதுவும் சேர்த்துக்கொள்ளப்படும். அதாவது ரூ.1.25 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ கூறியுள்ளார்.

ஏர் இந்தியாவின் அறிவிப்பு
"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்த ஒரு பயணியின் குடும்பத்திற்கும் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தலா 25 லட்சம் ரூபாய் இடைக்காலமாக வழங்கப்படும். டாடா சன்ஸ் ஏற்கனவே அறிவித்த 1 கோடி ரூபாயுடன், இது கூடுதலாகும்" என்று ஏர் இந்தியா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும், இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்க எங்கள் குழுக்கள் அனைத்தையும் செய்து வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 241 பேரில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உறுதிபூண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications