இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்! விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் விமான பயணிகள் தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வந்துவிடுமாறு ஏர் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த வெற்றியை இந்தியா கொண்டாடி வருகிறது.

pakistan jammu kashmir

இந்த நிலையில் இதை சகித்து கொள்ள முடியாத பாகிஸ்தான் பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து தாக்கும் பொருட்டு டிரோன் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை, நமது இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசம், அடித்து நொறுக்கியது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள நகரங்களில் பிளாக் அவுட் என சொல்லப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் சைரன்கள் கேட்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் எல் 70 பாதுகாப்பு கவசமானது பாகிஸ்தானின் டிரோன்களை துவம்சம் செய்தது. இதையடுத்து அறிவிக்கப்படாத போரை நிறுத்துமாறும் இல்லாவிட்டால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்தியா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் கேட்டபாடில்லை.

இதனால் அதற்கான விலையை கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்புகளை இந்தியா அழித்து விட்டது. அது ஏவிய டிரோன்களையும் இந்தியா வழிமறித்து தாக்கி ஒன்றும் இல்லாமல் ஆக்கியது.

இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அது போல் முப்படைகளின் அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேலும் எஞ்சியிருக்கும் சில விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

இதனால் விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா ஒரு அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதாவது இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருவதால் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வருமாறும் விமானம் புறப்படும் 75 நிமிடங்களுக்கு முன்பு செக் இன்கள் மூடப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+