ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.. 15 நாள் தடை நீக்கம்.. இன்றில் இருந்து திட்டமிட்டபடி துபாய் செல்லும்
டெல்லி: இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றில் (சனிக்கிழமை) இந்த விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து துபாய்க்கு வந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர்தான் அழைத்து வர வேண்டும் என்று துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்து இருந்தது. கடந்த 15 ஆம் தேதியில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் பயணிகள் சென்றனர்.

அவர்களில் இருவருக்கு துபாயில் இறங்கியவுடன் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு துபாய் சிவில் ஏவியேஷன் தடை விதித்தது. ஏர்இந்தியா அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டது.
மேலும், துபாய் இரண்டு இந்திய கொரோனா நோயாளிகளுக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தான் செலவை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.இதுகுறித்து கடிதம் எழுதி இருக்கும் துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம், ''ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரித்துள்ளோம். இந்த எச்சரிக்கை மீறப்பட்டுள்ளது.
இந்த வகையில் வரும் 15 நாட்களுக்கு அதாவது, வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை செலவை ஏற்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை செல்லுபடியாகும்'' என்று தெரிவித்தது.
இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த விளக்கத்தை தொடர்ந்து, இந்த விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும். இனி வரும் நாட்களில் மூன்று கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்பே துபாய் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம் அளித்தது.
இதையடுத்து இன்றில் (சனிக்கிழமை) இருந்து திட்டமிட்டபடி துபாய்க்கு செல்லவும், துபாயில் இருந்து திரும்பவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications