ஜீவனாம்சம்.. மனைவிக்கு மாத சம்பளம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு பராமரிப்பு செலவை கணவன் கட்டணும்: HC
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி, குழந்தைகளைக் கவனிப்பது தந்தை-தாய் இருவரின் கடமை என்பதை கூறியுள்ளது. ஒரு தந்தை, "என் சம்பளம் குறைவு, மனைவி அதிகம் சம்பாதிக்கிறார், எனவே நான் குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை கொடுக்க முடியாது" என்று வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் இதை ஒத்துக்கொள்ளவில்லை. என்ன நடந்தது தெரியுமா?
2014 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர் அந்த தம்பதியர்.. ஆனால், கணவர் மனைவியை உடல், மன மற்றும் பொருளாதார ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்பட்டதால் பிரிந்தனர்.

குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு
மனைவி, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை கோரி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். 2023-ல் விசாரணை நீதிமன்றம், மூன்று குழந்தைகளுக்காக தந்தை மாதம் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000, மொத்தம் ரூ.30,000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
உடனே தந்தை, அதை எதிர்த்து மேல்முறையிலும் மனு தாக்கினாலும், 2024-ல் செஷன்ஸ் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
அப்போது தந்தை கோர்ட்டில் வாதிடும்போது, "என் மாத வருமானம் ரூ.9,000 மட்டுமே. மனைவி அதிகமாக சம்பாதிக்கிறாள். எனவே முழு பராமரிப்பை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டத்திற்கு எதிராகவும், பராமரிப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவது" என வாதிட்டார்.
ஜீவனாம்சம்
உடனே மனைவி தன் தரப்பில் வாதிடும்போது, ""நீதிமன்ற உத்தரவு மட்டும் குழந்தைகளுக்கான பராமரிப்புக்கே தொடர்புடையது. நான் கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை தானே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் சம்பளம் அதிகமாக இருப்பது, தந்தையின் கடமையை நீக்க முடியாது" என்றார்..
மனைவி அதிக சம்பளம்
இதையடுத்து உயர்நீதிமன்றம், "குழந்தைகளை பராமரிப்பது இரு பெற்றோரின் சட்டபூர்வ மற்றும் சமூக கடமை. யார் அதிக சம்பாதிக்கிறார்கள் என்பதால், மற்றோர் பெற்றோரின் பொறுப்பு குறையாது. மேலும், குழந்தைகள் தாயின் காவலில் இருப்பதால், தாய் முதன்மை பராமரிப்பாளராகவும், தந்தை தேவையான பராமரிப்பு செலவை கொடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்.
குழந்தைகளை வளர்ப்பது தந்தை-தாயின் பொறுப்பு; சம்பளம் குறைவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு தேவையான பராமரிப்பை இருவரும் வழங்க வேண்டும்" என்று அதிரடியாக நேற்று தீர்ப்பளித்துள்ளது.
தட்டிக்கழிக்க முடியாது
இந்த நேரத்தில், கடந்த 2011-ல் டெல்லி ஹைகோர்ட் வேறொரு வழக்கில் பிறப்பித்திருந்த மற்றொரு வழக்கையும் இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..
அதாவது, டெல்லியில் வசித்து வரும் ஒரு தம்பதி விவாகரத்து பெற்றனர். இதுகுறித்து டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பில் அப்போது சொல்லும்போது, "தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளதால், தந்தை அவர்களுக்கு மாதம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். மகன் 18 வயது ஆகும் வரை, மகள் வேலைக்கு செல்லும் வரை அல்லது திருமணம் செய்யும் வரை தந்தை செலவு வழங்க வேண்டும்.
இப்போது மகன் இன்னும் படித்து வருகிறார், ஆனால் தந்தை பராமரிப்பு செலவை நிறுத்தியுள்ளார். நீதிமன்றம் சொல்லியது: மகன் படிப்பு முடியும் வரை தந்தை மாதம் ரூ.15,000 கொடுக்க வேண்டும். தாய் தனிப்பட்ட செலவாக இல்லாமல், தந்தை கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.
தந்தையின் கடமை முடிந்து விடாது
அதாவது மகனுக்கு 18 வயது ஆனதும் தந்தையின் கடமை முடிந்து விடாது என்று ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த இந்த உத்தரவு பொதுமக்களின் கவனத்தை அப்போது பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது மற்றொரு வழக்கில், மனைவி அதிகமாக சம்பாதித்தாலும், குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை வழங்குவதில் இருந்து தந்தை தப்பிக்க முடியாது" என்று அதிரடியான தீர்ப்பை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications