‛‛ஆளும் கட்சியே தோற்குதே’’.. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது - தேர்தல் ஆணையர்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் தான் நியாயமான தேர்தல் நடைபெறுகிறது என்பது அனைத்து கட்சிகளுக்குமே தெரியும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தான் ஆளும் கட்சியே தோற்கிறது. எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தல் தேதிகளை அவர் அறிவித்தார். மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முதற்கட்டமாக அதுவும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் மாதம் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார். முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி பேசினார்.
காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகளின் தலைவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி சந்தேகம் கிளப்பி வரும் நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராஜீவ் குமார் பதிலளித்து இருந்தார். இதுபற்றி ராஜீவ் குமார் கூறுகையில், ‛‛மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான பல்வேறு புகார்களை 40 முறை நீதிமன்றம் பரிசீலனை செய்து அத்தனையையும் நிராகரித்துள்ளது.
மேலும் அனைத்கட்சியினருக்குமே முறைகேடு செய்ய முடியாது என்பது தெரியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நியாயமான மற்றும் சிறந்த முறையிலான ஓட்டுப்பதிவு நடக்கும் என்பதை அவர்களின் இதயம் அறிந்திருக்கும். ஏனென்றால் அதே ஆளும் கட்சி கூட தேர்தலில் தோற்றுப்போய் உள்ளது. இதனால் மின்னணு வாக்கப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது'' என்றார்.












Click it and Unblock the Notifications