இனி அவங்களுக்கு வேலை இருக்காது.. கேலி செய்பவர்கள் குறித்து நகைச்சுவையாக பேசிய தலைமை நீதிபதி
டெல்லி: நீதித்துறையில் என்னை தான் அதிகம் டிரோல் செய்தார்கள். இனி கேலி செய்பவர்களுக்கு வேலை இல்லை. நாளை முதல் என்னை டிரோல் செய்தவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பேசினார். இன்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் டி ஒய் சந்திரசூட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய போகிறது. இதையடுத்து சந்திரசூட்டிற்கு உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதித்துறையில் என்னைதான் அதிகம் டிரோல் செய்தார்கள் என்றும், இனி கேலி செய்பவர்களுக்கு வேலை இல்லை எனவும் நகைச்சுவையாக பேசினார். தலைமை நீதிபதி பேசியதாவது:- அதிகமாக டிரோல் செய்யப்பட்ட நீதிபதியாக நான் தான் இருந்து இருப்பேன். நாளை முதல் என்னை டிரோல் செய்தவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். என்னை டிரோல் செய்தவர்களுக்கு நாளையில் இருந்து வேலை இல்லாமல் போக போகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். சூரிய ஒளி சிறந்த தொற்று நீக்கி. கொள்கையின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையை செய்யும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டேன். காகிதம் இல்லா நீதிமன்றன்ங்களை உருவாக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு வழக்கறிஞர்களின் ஆதரவு மிக முக்கியமானது. மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றம் ஏற்படுத்துவதே நீதிபதிகளின் கடமை.
நீதிமன்றத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளும், சட்ட அறிவு மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவு இரண்டையும் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கும் சஞ்சய் கண்னா, கண்ணியமானவர். நீதி வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பேசுகையில், "தலைமை நீதிபதி சந்திரசூட் எனது பணியை எளிமையானதாகவும், கடினமானதாகவும் ஆக்கியிருக்கிறார். அவர் அளவுக்கு எனது பயணம் இருக்காது" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications