அம்பேத்கர் பிறந்தநாள்.. ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு!
டெல்லி : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள். அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா வரும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பட்டியல் சாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பள்ளியிலும், சமூகத்திலும் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தாலும், அனைத்து தடைகளையும் மீறி கல்வி கற்று மிக உயரிய இடங்களை அடைந்தார்.
சமூக சீர்திருத்தத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார் அம்பேத்கர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மத்திய மாநில அரசுகள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றன.

தமிழ்நாடு அரசு, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை கடந்த ஆண்டு முதல்'சமத்துவ நாள்' என்று அறிவித்து, அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications