அதிகரிக்கும் கொரோனா.. நாளை, நாளை மறுநாள் தான் முக்கியமே! 3 மாநிலங்களில் மாஸ்க் கட்டாயம்!என்னாச்சு?
டெல்லி: இந்தியாவில் தற்போது மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து 3 மாநிலங்களில் அம்மாநில அரசுகள் பொது இடங்களில் மாஸ்க்கை கட்டாயமாக்கிய நிலையில் நாளையும், நாளை மறுநாளும் முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் குறைந்து இருந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் தான் சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முந்தைய வாரங்களை ஒப்பிடும்போது கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் இந்தியாவி்ல 6,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 31,194 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 11 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரேனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை என்பது 5 லட்சத்து 30 ஆயிரத்து 954யை தொட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா உறுதி செய்யும் சதவீதம் 5.63 என்ற அளவிலும், வாராந்திர கொரோனா உறுதி தன்மை னெ்பது 3.47 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் உரிய தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்புக்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.

இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாநிலங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 2வது கேரளாவில் கர்ப்பிணிகள், முதியர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரியிலும் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், மதுபான கடைகள், பொழுதுபோக்கு இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கட்டாயமாக பொதுமக்கள் மாஸ்க் அணிய புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர இந்தியா முழுவதும் நாளை(திங்கட்கிழமை), நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) என 2 நாட்கள் கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக Mock Dril நடைபெற உள்ளது. இந்த நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரேனாா நோய் தடுப்பு தொடர்பான செயல்முறை மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை தொடர்பான பயிற்சி அளிக்கப்படுவதோடு, கொரோனா தடுப்புக்கான முன்னெச்சரிக்கை பணிகள் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications