நிர்வாக திறமையில் தமிழகத்திற்கு முதலிடம்.. லிஸ்ட் போட்டு புகழ்ந்த அமித் ஷா
டெல்லி: தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
பல்வேறு நலத் திட்டங்களை துவங்கி வைப்பதற்காக சென்னை வந்த அமித் ஷா, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போன்றோரும் பங்கேற்றனர்.
இதில் அமித் ஷா தமிழக அரசை புகழ்ந்து பேசினார். அவர் கூறியதாவது:
கொரோனா கட்டுப்பாடு மட்டும் இல்லாமல் நிர்வாக திறமையிலும் தமிழகம் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது. உடல்நல குறியீட்டில் மாவட்டங்கள் இடையே வேலூர் ,கரூருக்கு முதல் இரு இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4400 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், சிசுக்களின் பராமரிப்பில் தமிழ்நாடு முன்னிலை பெற்றுள்ளது. உலகத்திலேயே மிகவும் தொன்மையான தமிழ் மொழியே உங்களிடம் உரையாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ் உரையாற்ற எனக்கும் ஆசை தான் ; ஆனால் உங்களிடம் தமிழில் பேச முடியாதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நீர் பாதுகாப்பு, நீர் விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது, விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கும் மோடி அரசின் 3 சீர்திருத்தங்களுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளித்துள்ளது. எடப்பாடி தலைமையில் ஆன சிறப்பான ஆட்சி தொடரும்.
எடப்பாடி-பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்துவதில் அரசு மட்டும் போராட வில்லை, 130 கோடி மக்களும் போராடுகின்றனர். 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். கொரோனவை கையாளுவதில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது. கொரோனா மட்டும் இல்லாமல் நிர்வாக திறமையிலும் தமிழகம் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதிஉதவி திட்டத்தின் கீழ் பலர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 4400 கோடி நிதியுதவியாக அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து குடும்பங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் 2024 க்குள் வழங்க மத்திய அரசு இலக்கு. கர்ப்பிணிகள், சிசுக்களின் பராமரிப்பு இந்தியாவில் தமிழ்நாட்டைப் போல எங்கும் வழங்கப்படவில்லை.
பாறை போன்ற இந்த அதிமுக ஆட்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்போம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் சென்ட்ரல் என பிரதமர் மோடி அரசுதான் பெயரிட்டது. மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு 32850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications