ஊழலற்ற, வளர்ச்சியை தரும் அரசு.. அனைவரும் வாக்களியுங்கள்.. 5 மொழிகளில் அமித் ஷா அசத்தல் ட்வீட்
டெல்லி: அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து மொழிகளிலும் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்றும் நடைபெறுகிறது.
இன்று காலை முதலே பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோன பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவதால் வாக்கப்பதிவு சற்று மெதுவாக நடைபெறுகிறது.

அமித் ஷா ட்வீட்
இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து மொழிகளில் ட்வீட் செய்துள்ளார். அமித் ஷா தனது ட்விட்டரில், "ஒரு வலுவான விருப்பம் கொண்ட மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தால் மட்டுமே, தமிழகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும். மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

புதுவை தேர்தல்
அதேபோல புதுவை தேர்தல் குறித்து அவர் தனது ட்விட்டரில், "புதுவையில் ஊழலற்ற வளர்ச்சியை அளிக்கும் ஒரு அரசை உருவாக்க மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற மற்றும் வளர்ச்சிக்கான அரசாங்கத்தை அமைக்க அதிகளவில் வந்து வாக்களிக்க, புதுச்சேரியின் அனைத்து வாக்காளர்களையும் வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அமைதி, செழிப்பு, வளர்ச்சி
மேற்கு வங்க தேர்தல் குறித்து அமித் ஷா வங்க மொழியில், "வங்காளத்தில் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் தீர்க்கமான தலைமையை தேர்ந்தெடுக்க இன்று நடைபெறும் மூன்றாம் கட்டத்தில் தேர்தலில் வங்காள வாக்காளர்கள் அனைவருக்கும் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். வங்கத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்" என்று அவர் இந்தியிலும், வங்காள மொழியிலும் ட்வீட் செய்துள்ளார்.

Array
கேரளாவில் நடைபெறும் தேர்தலில் ஊழலற்ற மக்களுக்கு வளர்ச்சியைத் தரும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக இளம் வாக்காளர்களும் முதல் முறை வாக்காளர்களும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் மலையாளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதேபோல, அசாம் தேர்தலிலும் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று அசாம் மொழியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications