டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழலற்ற, வளர்ச்சியை தரும் அரசு.. அனைவரும் வாக்களியுங்கள்.. 5 மொழிகளில் அமித் ஷா அசத்தல் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து மொழிகளிலும் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்றும் நடைபெறுகிறது.

இன்று காலை முதலே பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோன பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவதால் வாக்கப்பதிவு சற்று மெதுவாக நடைபெறுகிறது.

அமித் ஷா ட்வீட்

அமித் ஷா ட்வீட்

இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து மொழிகளில் ட்வீட் செய்துள்ளார். அமித் ஷா தனது ட்விட்டரில், "ஒரு வலுவான விருப்பம் கொண்ட மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தால் மட்டுமே, தமிழகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும். மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

புதுவை தேர்தல்

புதுவை தேர்தல்

அதேபோல புதுவை தேர்தல் குறித்து அவர் தனது ட்விட்டரில், "புதுவையில் ஊழலற்ற வளர்ச்சியை அளிக்கும் ஒரு அரசை உருவாக்க மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற மற்றும் வளர்ச்சிக்கான அரசாங்கத்தை அமைக்க அதிகளவில் வந்து வாக்களிக்க, புதுச்சேரியின் அனைத்து வாக்காளர்களையும் வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அமைதி, செழிப்பு, வளர்ச்சி

அமைதி, செழிப்பு, வளர்ச்சி

மேற்கு வங்க தேர்தல் குறித்து அமித் ஷா வங்க மொழியில், "வங்காளத்தில் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் தீர்க்கமான தலைமையை தேர்ந்தெடுக்க இன்று நடைபெறும் மூன்றாம் கட்டத்தில் தேர்தலில் வங்காள வாக்காளர்கள் அனைவருக்கும் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். வங்கத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்" என்று அவர் இந்தியிலும், வங்காள மொழியிலும் ட்வீட் செய்துள்ளார்.

Array

Array

கேரளாவில் நடைபெறும் தேர்தலில் ஊழலற்ற மக்களுக்கு வளர்ச்சியைத் தரும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக இளம் வாக்காளர்களும் முதல் முறை வாக்காளர்களும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் மலையாளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதேபோல, அசாம் தேர்தலிலும் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று அசாம் மொழியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Amit shah tweets in 5 languages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X