Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நெய் எங்க நெய் இல்லை.. திருப்பதி லட்டு விவகாரத்துக்கு.. கும்பிடு போட்ட "அமுல்" நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்திய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய் அமுல் நிறுவனத்தினருடையது என்ற செய்தியும் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் இதுவரை நெய் விநியோகம் செய்ததே இல்லை என்று அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

tirupati laddu andhra pradesh amul

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.

குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டில் பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டதாக பக்தர்கள் கருதும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே திருப்பதி தேவஸ்தானத்துக்கு பிரபலமான அமுல் நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.


இதுகுறித்து, அமுல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு தங்கள் நிறுவனத்தின் நெய் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரை நூற்றாண்டுகளாக தங்களின் நிறுவன நெய் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அதிநவீன உற்பத்தி நிலையங்களில் எங்களது நிறுவனத்தின் நெய் சுத்தமான பாலில் தயாரிக்கப்படுகிறது.

அமுல் நெய் உயர்தரமான தூய்மையான பால் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்டுகிறது. எஃப்எஸ்எஸ்ஏஐ வழிகாட்டுதல்படி கலப்படம் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு தர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அமுல் நெய் சந்தைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது நிறுவனம் குறித்து தவறான தகவல் பரவி வரும் நிலையில், அமுல் நிறுவனம் சார்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+