சுதந்திர தினத்தில் வீடுகள் தோறும் தேசியக்கொடி.. ஹர் கர் திரங்கா.. அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
டெல்லி: நாடு முழுவதும் நாளை முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள், அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்றி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பவளவிழா சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு வீடுகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்களில் மூன்று நாட்களுக்கு மூவர்ணக்கொடி ஏற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. ஹர் கர் திரங்கா என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இது தொடர்பான விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் மூவர்ணக் கொடி மூன்று வண்ணங்களைக் கொண்டது மட்டுமல்ல. நமது மூவர்ணக்கொடி நமது கடந்த காலத்தின் பெருமை, நமது நிகழ்காலத்தின் மனசாட்சி மற்றும் எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பாகும். நமது மூவர்ணக் கொடி இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மையின் சின்னம்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூவர்ணக் கொடியில் நாட்டின் எதிர்காலத்தையும் கனவுகளையும் கண்டனர், அதை ஒருபோதும் வீழ்த்தவில்லை. இன்று, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இந்தியாவுக்கான பயணத்தைத் தொடங்கும்போது, மூவர்ணக் கொடி மீண்டும் இந்தியாவின் ஒற்றுமையையும் உணர்வையும் பிரதிபலிக்கிறது.

திரங்கா யாத்திரையிலும், நாடு முழுவதும் நடைபெறும் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்திலும் நாட்டின் சக்தியும், பக்தியும் பிரதிபலிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்படும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு சாதி, மதம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள், ஒற்றுமை மற்றும் அடையாளத்தின் தன்னிச்சையான உணர்வுடன் ஒன்றாக வருகிறார்கள். முழு நாடும் புதிய கனவுகள் மற்றும் தீர்மானங்களுடன் இணைந்துள்ளது. இதுதான் இந்தியாவின் மனசாட்சியுள்ள குடிமகனின் அடையாளம். இதுவே பாரதி அன்னையின் குழந்தைகளின் அடையாளம். இந்த பிரச்சாரத்திற்கு ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தங்களின் ஆதரவை அளித்து தங்கள் கடமையை செய்கிறார்கள். 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தால் பல ஏழைகள், நெசவாளர்கள் மற்றும் கைத்தறித் தொழிலாளர்களும் கூடுதல் வருமானம் பெறுகிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டு வரும் செவ்வாய்கிழமை நாட்டின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு நாளை ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரைக்கும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, திரங்கா சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர் மேலும் மேலும் தேசிய முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க இது நம்மைத் தூண்டுகிறது.
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் #HarGharTiranga இயக்கத்தில் உங்கள் அனைவரையும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அதனை https://harghartiranga.com இணைய தளங்களில் பதிவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications