அமலாக்க துறை அலுவலகத்தில் அனில் அம்பானியின் மனைவி! அந்நிய செலாவணி வழக்கில் ஆஜர்! என்ன மேட்டர்
டெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஒரு காலத்தில் இந்தியாவில் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானியின் சகோதரரான இவர் பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார். இருப்பினும், அனைத்தும் நஷ்டமாகவே அவர் அத்தனையையும் இழந்தார்.

இதற்கிடையே அவர் மீது அந்நிய செலாவணி முறைகேடு புகாரும் இருக்கிறது.. இது தொடர்பாக விசாரணையை அமலாக்கத் துறை ஒரு பக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் இப்போது அவரது மனைவியும் மூத்த நடிகையுமான டினா அம்பானி அமலாக்க இயக்குநரகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதே வழக்கில் நேற்று அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜராகியிருந்த நிலையில், இன்று அவரது மனைவி டினா ஆஜாராகியுள்ளார்.
அம்பானியின் நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புதிய வழக்கு இது எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். முன்னதாக 64 வயதான அனில் அம்பானி, யெஸ் வங்கியின் ராணா கபூருக்கு எதிரான பணமோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டு அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகள் மூலம் ₹ 420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அனில் அம்பானிக்கு கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், வருமான வரித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தற்காலிக தடை விதித்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
அனில் அம்பானி தனது வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications