இந்த முறை வருமான வரியில் மாற்றம் சாத்தியமா? பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி வெளியானது!
டெல்லி: நடப்பாண்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த முறையாவது வருமான வரி விதிப்பில் மாற்றம் வருமா என்று நடுத்தர வகுப்பினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டம் ஜன.31ம் தேதி தொடங்கி பிப்.13ம் தேதி முடிவடைகிறது. இந்த தேதியில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதேபோல இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச்.10ம் தேதி தொடங்கி ஏப்.4ம் தேதி முடிவடைகிறது.

இந்த முறையும் அல்வாதானா?:
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், நிர்மலா சீதாராமன் அல்வாக கிண்டி அனைவருக்கும் வழங்குவது வழக்கம். உண்மையில் அவர் தனது பட்ஜெட்டில்தான் அனைவருக்கும் அல்வாக கொடுத்திருக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டாவது அல்வாவுடன் சேர்த்து மக்களுக்கு நிவாரணம் கொடுப்பாரா? என்று பலர்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு வருமான வரி உச்சவரம்பு குறித்து இருக்கிறது. தற்போது ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமான உச்சவரம்பை ரூ.20 லட்சமாக மாற்ற வேண்டும் என்று நடுத்தர பிரிவினர் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications