குட் நியூஸ்... கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து... இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 2-deoxy-D-glucose என்ற புதிய மருந்தை அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலின் 2ஆம் அலையால், இந்தியாவில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
லேசான கொரோனா பாதிப்பு உடைய நோயாளிகளுக்கு பொதுவாக எவ்வித சிகிச்சையும் தேவைப்படாது. கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை அதிகமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படும்.

கொரோனா சிகிச்சை
இருப்பினும், தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒரு குறிப்பிட்ட மருந்து இல்லை. பரவலாகப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துகூட, கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பையே கட்டுப்படுத்துகிறது. அவை கொரோனா வைரசை அழிப்பதில்லை. அதேபோல ரெம்டெசிவிரை மருத்துவர் ஆலோசனையின்றி எடுப்பது ஆபத்தானது என்றும் வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

புதிய மருந்திற்கு ஒப்புதல்
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 2-deoxy-D-glucose என்ற புதிய மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இணைந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளன.

தூள் வடிவில் இருக்கும் மருந்து
மருத்துவ சோதனை முடிவுகளில் இவை கொரோனாவை விரைவாகக் குணப்படுத்துவது உறுதியானதைத் தொடர்ந்து, இதற்கு தற்போது அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தூள் வடிவத்தில் இருக்கும் இந்த மருந்தைத் தண்ணீரில் கரைத்து, கொரோனா நோயாளி எடுத்துக்கொள்ள வேண்டும். இவை கொரோனாவில் இருந்து நோயாளியை விரைவாகக் குணப்படுத்துவது சோதனைகளில் தெரியவந்துள்ளது. மேலும், நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உதவியையும் இந்த மருந்து குறைக்கிறது.

மூன்றாம்கட்ட சோதனை
கடந்த ஆண்டு இந்த மருந்தின் 2ஆம் கட்ட சோதனையில் இவை பாதுகாப்பானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஆறு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட மூன்றாம்கட்ட சோதனையில் இந்த மருந்து கொரோனா நோயாளிகளை விரைவாகக் குணப்படுத்துவது உறுதியானது. இந்து மருந்தை எடுத்துக்கொள்பவர்கள் விரைவாக கொரோனாவில் இருந்து குணமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications