தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ்.. கட்டுமான பணிகளை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லி:சென்னை தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு உச்சநீதி மன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னை தியாகராயர் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸின் ஜவுளி நிறுவனத்தின் 9 மாடிக் கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போதே தமிழகம் முழுவதும்... குறிப்பாக சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. பல்வேறு வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த சூழ்நிலையில், தீ விபத்துக்குள்ளான கட்டிடம் பின்னர் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது.
அதன் பின்னர் அந்தக் கட்டிடத்தை மீண்டும் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.கட்டிட அனுமதி கடந்த ஜூன் 21-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்டிடம் வேகமாகக் கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிஎம்டிஏ விதிகளுக்கு எதிராக அதே இடத்தில் புதிய கட்டிடத்தைக் கட்டும் பணியை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தொடங்கியுள்ளதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கானது, இருதரப்பின் வாத, பிரதிவாதங்களுக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரரான கண்ணன் பாலக்கிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்படுவதாக வாதிடப்பட்டது.
சென்னை சில்க்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். உரிய அனுமதி பெற்றுத்தான் கட்டிடம் கட்டப்படுவதாக அவர் கூறினார். இதையடுத்து, கண்ணன் பாலகிருஷ்ணன் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, கட்டிடத்தை கட்டுவதற்கும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications