எனக்கு அதிமுகவில் இருக்க பிடிக்கவில்லை.. அதான் ஒதுங்கி இருந்தேன்: அப்சரா ரெட்டி
ராகுல்காந்தி ஒரு மனிதராக மதித்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக அப்சரா கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான் ஒதுங்கி இருந்தேன் என்றும், சுற்றுப்பயணம் செய்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என்றும் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக ராகுல் காந்தி அப்சரா ரெட்டியை நியமித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அப்சரா ரெட்டி சொன்னதாவது:
"பாஜகவில் தனிப்பட்ட முறையில் சுயமாக சிந்திப்பவர்களுக்கு இடம் இல்லை. அப்படியே சிந்தித்தாலும் அவர்களை ஒதுக்கி புறக்கணித்து விடுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை திருநங்கையாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் ஒரு மனிதராக பார்த்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.
திறமைக்கு ஆண்-பெண் பாகுபாடில்லை. எல்லோரும் ஒன்றுதான். திறமைசாலிகளுக்கு காங்கிரசில் இடம் உண்டு. 'மக்கள் பணியாற்ற உங்களை போன்றவர்கள் காங்கிரசில் இருக்க வேண்டும்' என்று கூறியது எனக்கு புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் மறைந்த ஜெயலலிதா என்னை செய்தி தொடர்பாளராக நியமித்தார். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அக்கட்சியில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை. அதனால்தான் இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்தேன். திருநங்கையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் நிரூபித்து காட்டுவேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைப்பேன்" என்றார்.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications