எனக்கு அதிமுகவில் இருக்க பிடிக்கவில்லை.. அதான் ஒதுங்கி இருந்தேன்: அப்சரா ரெட்டி
ராகுல்காந்தி ஒரு மனிதராக மதித்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக அப்சரா கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான் ஒதுங்கி இருந்தேன் என்றும், சுற்றுப்பயணம் செய்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என்றும் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக ராகுல் காந்தி அப்சரா ரெட்டியை நியமித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அப்சரா ரெட்டி சொன்னதாவது:
"பாஜகவில் தனிப்பட்ட முறையில் சுயமாக சிந்திப்பவர்களுக்கு இடம் இல்லை. அப்படியே சிந்தித்தாலும் அவர்களை ஒதுக்கி புறக்கணித்து விடுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை திருநங்கையாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் ஒரு மனிதராக பார்த்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.
திறமைக்கு ஆண்-பெண் பாகுபாடில்லை. எல்லோரும் ஒன்றுதான். திறமைசாலிகளுக்கு காங்கிரசில் இடம் உண்டு. 'மக்கள் பணியாற்ற உங்களை போன்றவர்கள் காங்கிரசில் இருக்க வேண்டும்' என்று கூறியது எனக்கு புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் மறைந்த ஜெயலலிதா என்னை செய்தி தொடர்பாளராக நியமித்தார். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அக்கட்சியில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை. அதனால்தான் இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்தேன். திருநங்கையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் நிரூபித்து காட்டுவேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைப்பேன்" என்றார்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்











Click it and Unblock the Notifications