கர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கு... உச்சநீதிமன்றத்தில் சீனியர் வக்கீல்களின் அனல்பறந்த வாதங்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Karnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ
டெல்லி: கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி மற்றும் ராஜீவ் தான் ஆகியோர் அனல்பறக்கும் ஆனித்தரமான வாதங்களை முன்வைத்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 பெஞ்ச் நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்தனர். எம்.எல்.ஏக்கள் சார்பாக முகுல் ரோத்தகி, சபாநாயகர் சார்பாக அபிஷேக்மனு சிங்வி, முதல்வர் குமாரசாமி தரப்பில் ராஜீவ் தவான் ஆகியோர் வாதிட்டனர்.

இவ்வழக்கில் நாளை காலை 10.3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்றைய விசாரணையில் முகுல் ரோத்தகி முன்வைத்த முக்கிய கருத்து:
- நான் எம்.எல்.ஏ.வாக இருக்க விரும்பவில்லை என்பது என் உரிமை. அந்த உரிமையை சபாநாயகர் பறிக்க முடியாது.
- ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
- அரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும்.
- ராஜினாமா செய்ததாக உச்சநீதிமன்றத்திலும் ஊடகங்களிலும் எம்,எல்.ஏக்கள் அறிவித்த பின்னரும் சபாநாயகர் முடிவு எடுக்காதது வேதனைக்குரியது.
சபாநாயகர் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி வைத்த வாதம்;
- ராஜினாமா கொடுத்த எம்.எல்.ஏக்களிடம் அரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் சபாநாயகர் ஜூலை 11-ல் விசாரணை நடத்தினார்.
- ராஜினாமா கடிதம் கொடுத்த 15 எம்.எல்.ஏக்களில் 11 பேர் சபாநாயகரை சந்தித்தனர். 4 பேர் இன்னமும் சபாநாயகரை சந்திக்கவில்லை.
- தம்மை சந்திக்க வருவதாக எந்த எம்.எல்.ஏ.வும் தெரிவிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
- எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சந்திக்க மறுத்ததாக கூறப்படுவது தவறான தகவல்.
- எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அதில் இருந்து தப்பிக்க ஒருவழியாக ராஜினாமாவை பயன்படுத்த முடியாது.
- சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் அது தகுதி நீக்கத்துக்குரியது- ஏனெனில் கட்சிக்கு எதிரான நடவடிக்கை.
- சபாநாயகரின் முடிவு எடுக்கும் அதிகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது; கடந்த ஆண்டு உச்சநீதிமன்றமானது கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது என்பது ஆட்சி அமைப்பதற்கானது மட்டுமே.
முதல்வர் குமாரசாமி தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் முன்வைத்த வாதம்:
- சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட முடியாது; உச்சநீதிமன்றத்தின் வரம்புகுட்பட்ட வழக்கே அல்ல இது.
- எம்.எல்.ஏக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.
- ராஜினாமாவை அனுப்பிவிட்டு மும்பைக்கு சென்ற எம்.எல்.ஏக்கள் ஏன் சபாநாயகரை சந்திக்கவில்லை
- எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்றால் இவர்கள் நாளை கட்சி தாவி அமைச்சர்களாவார்கள். இந்த அரசியல் களைகளை அனுமதிக்க கூடாது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications