பெரும் சோகம்.. லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் விழுந்து விபத்து.. 9 வீர்கள் உயிரிழப்பு
டெல்லி: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியாகியிருப்பதாகவும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்கள் முகாமுக்கு வாகனங்களில் திரும்புவதும் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடங்களுக்கு வாகனங்களில் செல்வது வழக்கம். ஆபத்தான மலைப்பாதைகளை கொண்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் மிகவும் சவாலன தட்பவெப்ப நிலையையும் பொருட்படுத்தாது தேசத்தை காக்கும் பணியில் ராணுவ வீரரக்ள் ஈடுபட்டுள்ளனர்.

லாடாக்கை பொறுத்தவரை சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனா அத்துமீறி நுழைய முயன்றது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி இருநாட்டுப் படைகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக்கில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நம் ராணுவ வீரர்கள் அதிக அளவில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். இந்த நிலையில், இன்று லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் டிரக்கில் சென்ற ராணுவ அதிகாரி மற்றும் 8 ஜவான்கள் என மொத்தம் 9 பேர் பலியாகினர். ஒரு வீரர் காயத்துடன் மீட்கப்பட்டார். லே- வில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கியாரி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் டிவிஷனல் தலைமையகம் கியாரியில் தான் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இன்று மாலை 4 முதல் 5 மணிக்கும் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்குள்ளான டிரக் சென்ற போது மேலும் 5 ராணுவ வாகனங்கள் வந்துள்ளன.
அப்போதுதான் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் டிரக் பாய்ந்துள்ளது. இந்த கோர விபத்து நடைபெற்றதும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும், 9 வீரர்கள் சடலமாகவே மீட்கப்படதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. தேசத்தை காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் ராணுவ வீரர்கள், பணியின் போது விபத்தில் சிக்கி பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications