ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல்.. இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்! முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பில்லை
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளிவர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் எனும் பெருமையை நரேந்திர மோடி பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் 100 ஆண்டுவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியம். எனவே எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

மட்டுமல்லாது இந்த தேர்தலில் 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்ற பாஜக முயன்று வருகிறது. அதாவது நாடு முழுவதும் 400 தொகுதிகளை கைப்பற்றுவதே இதன் இலக்காகும். இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில், லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில், மோடி தலைமையில் இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது.
ஏற்கெனவே சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எந்த அறிவிப்பும் வெளிவர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய அறிவிப்புகள் வெளிவராது.
அதேநேரம், தேர்தலை எதிர்கொள்வது குறித்த பல்வேறு விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மீதான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பத குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இது தவிர, மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் விவகாரம், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி, பீகாரில் நிதிஷ் குமாருடன் சலசலப்பு, பஞ்சாபில் கூட்டணிக்கே ஆல் இல்லாது போன்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications