முறைகேடான மணல் குவாரிகளுக்கு தடை கோரி வழக்கு.. தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவு
டெல்லி: முறைகேடான மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் முறைகேடாக மணல் குவாரிகள் நடப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 5 மாநில அரசுகளுடன் மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதால், இயற்கை வளம் கெடுவதாக தமிழகத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாயும் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதால், நீராதாரம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. விளைநிலங்கள் பாதிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கம் முறையாக கண்காணிப்பதில்லை.
இந்த குவாரிகளை செயல்படாமல் தடுத்து நிறுத்துவதுடன் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
மணல் குவாரிகளுக்கு வழங்கப்படும் அனுமதியை முறைப்படுத்த வேண்டும் என்பதும், மனுதாரரின் கோரிக்கை. இவ்வழக்கை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது உச்சநீதிமன்றம் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications