முறைகேடான மணல் குவாரிகளுக்கு தடை கோரி வழக்கு.. தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவு
டெல்லி: முறைகேடான மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் முறைகேடாக மணல் குவாரிகள் நடப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 5 மாநில அரசுகளுடன் மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதால், இயற்கை வளம் கெடுவதாக தமிழகத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாயும் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதால், நீராதாரம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. விளைநிலங்கள் பாதிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கம் முறையாக கண்காணிப்பதில்லை.
இந்த குவாரிகளை செயல்படாமல் தடுத்து நிறுத்துவதுடன் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
மணல் குவாரிகளுக்கு வழங்கப்படும் அனுமதியை முறைப்படுத்த வேண்டும் என்பதும், மனுதாரரின் கோரிக்கை. இவ்வழக்கை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது உச்சநீதிமன்றம் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications