Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறங்கி வரும் காங்கிரஸ் தலைமை.. அதிருப்தி குழு தலைவர் குலாம்நபி ஆசாத்-சோனியா காந்தி சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ஜி23 எனப்படும் அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று டெல்லியில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி கட்டமைப்பில் என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வி அடைந்த பின்னர் காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. முதல் கட்டமாக 5 மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களை ராஜினாமா செய்ய இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிருப்தியாளர்கள் குழுவின் மூத்த தலைவர் பூபிந்தர்சிங் ஹூடா, ராகுல் காந்தியை சந்தித்தார். பின்னர் குலாம்நபி ஆசாத்தையும் ஹூடா சந்தித்து பேசினார். மேலும் 5 மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஜி23 அதிருப்தியாளர்கள் குழு தலைவர்கள் 3 முறை ஆலோசனை நடத்தி இருந்தனர்.

கலகக் குரல் கபில் சிபல்

கலகக் குரல் கபில் சிபல்

அதிருப்தி குழுவைச் சேர்ந்த கபில் சிபல், சோனியா காந்தி பதவியை விட்டுத் தர வேண்டும். புதியவர் ஒருவர் பதவிக்கு வர வேண்டும். செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. செயற்குழுவில் இடம்பெறாத நாங்களும் இருக்கிறோம் எங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றார்.

ப.சிதம்பரம் பதிலடி

ப.சிதம்பரம் பதிலடி

ஆனால் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், அதிருப்தியாளர்கள் கட்சியை உடைத்துவிடக் கூடாது. சோனியா காந்தி குடும்பம் மட்டுமே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு அல்ல. அனைவரும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராஜினாமா செய்ய சொல்வது எப்படி சரியாக இருக்கும்? அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் கட்சி நிர்வாக அமைப்புகளை கலைத்துவிட்டு புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கூறியிருந்தார்.

சோனியா-குலாம்நபி சந்திப்பு

சோனியா-குலாம்நபி சந்திப்பு

இந்த நிலையில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் குலாம்நபி ஆசாத் சற்று முன்னர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிருப்தியாளர்களின் குழுவின் தலைவராக இருந்த குலாம்நபி ஆசாத் மீது சோனியா காந்தி கடும் கோபத்தில் இருந்தது. அதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவியும் கொடுக்கப்படவில்லை. மேலும் பாஜகவுடன் குலாம் நபி ஆசாத் நெருக்கமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. பாஜக சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக குலாம் நபி ஆசாத் நிறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது.

காங். மேலிடம் தீவிரம்

காங். மேலிடம் தீவிரம்

இப்பின்னணியில் இன்று சோனியா காந்தியை குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி கட்டமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறைதான் காங்கிரஸ் மேலிடம் சற்று இறங்கி வந்து கட்சியை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+