Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த ஊர் ஓபிஎஸ் போல! டெல்லி சிஎம் சேரில் அமர மறுத்த முதல்வர் அதிஷி.. அது கெஜ்ரிவாலுக்கு சொந்தமானதாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதாகி சிறைக்குச் செல்லும் போது தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒ பன்னீர்செல்வம் கடைசி வரை சிஎம் சேரில் உட்காரவே இல்லை. இப்போது டெல்லியிலும் அங்கு முதல்வராகப் பதவியேற்றுள்ள அதிஷி, சிஎம் சேரில் உட்காராமல் அருகில் காலியாக ஒரு சேர் போட்டு அமர்ந்துள்ளார். டெல்லி சிஎம் சேர் கெஜ்ரிவால் வரும் வரை காத்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இந்தாண்டு தொடக்கத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதானார். கடந்த சில மாதங்களாகவே சிறையில் இருந்த அவருக்குச் சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது.

delhi atishi arvind kejriwal

இருப்பினும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக டெல்லி அமைச்சரவையில் இருந்த அதிஷி முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதன்படி அதிஷி இன்று திங்கள்கிழமை டெல்லியின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஓபிஎஸ் மாதிரி: ஆனால், இங்கு எப்படி ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் போது முதல்வராகப் பதவியேற்ற ஓபிஎஸ் முதல்வர் நாற்காலியில் அமர மறுத்துவிட்டாரோ.. அதேபோல அதிஷியும் தனது முதல்வர் நாற்காலியில் அமர மறுத்துவிட்டார். அதாவது ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றிருந்த போது, ஓபிஎஸ் முதல்வர் பொறுப்பேற்றார்.

அவர் என்ன தான் முதல்வராகப் பொறுப்பேற்றாலும் கூட ஜெயலலிதா விடுதலையாகி வரும் வரை அவர் முதல்வர் சேரில் கூட அமரவில்லை. ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலி காலியாக இருந்த நிலையில், அவர் வேறு ஒரு சேரை தான் பயன்படுத்தினார். அதேபோலத் தான் இப்போது அதிஷியும் முதல்வர் நாற்காலியை காலியாக விட்டுள்ளார். அதற்குப் பதிலாகச் சாதாரண சேர் ஒன்றைப் போட்டு அதில் தான் அமர்ந்தார்.

ராமாயணம்: தன்னை ராமாயணத்தில் வரும் பரதனுடன் ஒப்பிட்டுக் கொண்ட அதிஷி, முதல்வர் பதவியில் கெஜ்ரிவால் இல்லாத போதிலும் அவரது ஆட்சியைத் தருவேன் என உறுதியளித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அன்று ராமர் சிறைக்குச் சென்ற போது பரதன் எந்த சுமையை சுமந்தாரோ இன்று நானும் அதே சுமையைச் சுமக்கிறேன். ராமரின் செருப்பை அவர் அரியணையில் வைத்து ஆட்சி செய்ததைப் போலவே, நானும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லியை ஆட்சி செய்வேன்" என்றார்.

டெல்லி மக்கள் நற்சான்றிதழ் அளிக்கும் வரை தானும் சரி, மனிஷ் சிசோடியாவும் சரி கேபினட் பொறுப்பேற்க மாட்டோம் என கெஜ்ரிவால் கூறியிருந்தார். அப்போதே பலரும் டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறி வருகின்றனர்.

காத்திருக்கும்: இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி மேலும் கூறுகையில், "இந்த முதல்வர் நாற்காலி கெஜ்ரிவாலுக்குச் சொந்தமானது.. டெல்லிக்கு அடுத்தாண்டு பிப். மாதம் தேர்தல் நடக்கும். அப்போது டெல்லி மக்கள் அவரை மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதுவரை, இந்த நாற்காலி இந்த அலுவலகத்திலேயே இருக்கும். கெஜ்ரிவாலின் வருகைக்காகக் காத்திருக்கும்" என்றார்.

பாஜக விமர்சனம்: அதேநேரம் முதல்வர் நாற்காலியில் அதிஷி அமர மறுத்ததைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக இதைக் கடுமையாகச் சாடியுள்ளது. டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இரண்டு சேர்களை வைத்தது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் இது முழுக்க முழுக்க விதிமீறல் என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+