ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு.. குற்றவாளி மீது பாய்ந்தது கொலை முயற்சி வழக்கு
டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி, ஜாமியா பல்கலைக்கழகத்தில் இன்று திரளான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது இளைஞர் ஒருவர் மாணவர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் திடீரென சுட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டது ராம் கோபால் சர்மா என்ற 19 வயது இளைஞர் என்று தெரியவந்தது. இந்த நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவத்தை கண்டித்ததுடன் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
இதனிடையே டெல்லி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 307வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவரான சதாப் பாரூக் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
ராமநாதபுரம் கருப்பூர் அரசு பள்ளியில் இப்படியும் ஒரு சம்பவம்.. பொதுமக்களை அதிர வைத்த புகைப்படம் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications