ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு.. குற்றவாளி மீது பாய்ந்தது கொலை முயற்சி வழக்கு
டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி, ஜாமியா பல்கலைக்கழகத்தில் இன்று திரளான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது இளைஞர் ஒருவர் மாணவர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் திடீரென சுட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டது ராம் கோபால் சர்மா என்ற 19 வயது இளைஞர் என்று தெரியவந்தது. இந்த நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவத்தை கண்டித்ததுடன் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
இதனிடையே டெல்லி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 307வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவரான சதாப் பாரூக் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications