Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எப்படி பழிவாங்குறேன் பாருங்க.." கழிவறையில் அவுரங்கசீப் பெயரை ஒட்டி வைத்து பூரித்த பாஜக பிரமுகர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக கழிவறையில் அவுரங்கசீப் பெயர் போஸ்டரை ஒட்டிய பாஜக பிரமுகர், டெல்லியில் ஜூம்மா மசூதியையும் தோண்டவேண்டும் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது..

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இதன் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மன் மற்றும் கண்ணுக்கு தெரியாத இதர இந்து தெய்வங்களை தினமும் வணங்க அனுமதிகோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் விசாரித்தது. மசூதியை ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்தது. இந்த குழு ஆய்வு நடத்தியது.

மசூதியில் சிவலிங்கமா?

மசூதியில் சிவலிங்கமா?

இந்த ஆய்வின்போது மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மசூதி நிர்வாகம் மறுத்தது. "அது சிவலிங்கம் இல்லை; நீரூற்று" என தெரிவித்தது. இதனை ஏற்க இந்துத்துவ அமைப்பினர் மறுத்தனர். மேலும் ஆய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழுகைக்கு அனுமதி

தொழுகைக்கு அனுமதி

இதற்கிடையே ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் வாரணாசி நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் மசூதியில் தொடர்ந்து முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கழிவறையில் போஸ்டர்

கழிவறையில் போஸ்டர்

இந்நிலையில் தான் டெல்லி உத்தம் நகர் பகுதியில் பாஜக பிரமுகர் அச்சல் சர்மா ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். அதாவது அவுரங்கசீப்பின் பெயர் இருக்கும் போஸ்டரை கழிவறை சுவரில் சுவரில் ஒட்டிய அவர் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அந்த வீடியோவில் பேசியதாவது:

டெல்லி மசூதியையும் தோண்டனும்

‛‛நான் இந்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அனைத்து கழிப்பறைகளுக்கும் அவுரங்கசீப் முத்ராலே அல்லது சவுசாலே எனும் போஸ்டரை ஒட்டுங்கள். கழிப்பறையின் பெயரை மாற்றம் செய்யுங்கள். வாரணாசி கியான்வாபி மசூதியில் முஸ்லிம்கள் 400 முதல் 500 ஆண்டுகளாக சிவனை மறைத்து வைத்துள்ளனர். கியான்வாபி மசூதியை போல் டெல்லி ஜூம்மா மசூதியையும் தோண்ட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அங்கும் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் வடிவமைப்புகள் காணப்படுகின்றன'' என்றார். இது தற்போது சர்சசையாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+