மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க மோடி அழைப்பு
டெல்லி: கொரோனாவைரஸ் பாதிப்புக்கு எதிராக மார்ச் 22ம் தேதி ஒரு நாள் மக்கள் அனைவரும் இணைந்து சுய ஊரங்கை கடைப்பிடிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேலும் அதை கட்டுப்படுத்தும் நோக்கோடு, மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இந்தியா எந்த அளவிற்கு உறுதியுடன் இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டுவதற்கு மக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பணியிலிருந்தால், அதை வீட்டிலிருந்தே செய்ய வேண்டும். மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்ற அத்தியாவசிய தேவைகளில் இருப்பவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கலாம்.
மக்கள் தனிமைப் படுத்திக் கொள்ளுவது தான் இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு ஆகச்சிறந்த வழி. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பத்து பேரையாவது தொலைபேசியில் அழைத்து இந்த சுய ஊரடங்கு உத்தரவு பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை செயல்படுத்தி வெற்றி பெற்று காட்டுவோம், என்றும் அவர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications