பாபர் மசூதியை கட்டியது முதல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரை.. வழக்கு கடந்து வந்த 70 ஆண்டு கால பாதை
Recommended Video
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் பாபர் மசூதியை பாபர் கட்டியது முதல் இன்று வரை அந்த இடத்தில் நிலவும் பிரச்சினைகள், வழக்குகள், அந்த வழக்குகள் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது என்பதை பார்ப்போம்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.
இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது.

கடந்து வந்த பாதை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். அதன் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

நீதிமன்றத்தில்
1528- பாபர் மசூதியை முகாலய மன்னர் பாபரின் படைவீரரான மிர் பாக்வி கட்டினார்.
1885- பாபர் மசூதியின் வெளிப்புறத்தில் ஒரு விதானம் கட்ட அனுமதி கோரி ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மஹாந்த் ரகுபிர் தாஸ் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
1949- சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள குவிமாடத்தில் ராம் லல்லாவின் சிலைகள் வைக்கப்பட்டன.
1950- இந்த கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடத்தவும் சிலைகளை வைக்கவும் பரமஹன்ச ராமசந்திர தாஸ் வழக்கு தொடுத்தார்.
1959- அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கோரி நிர்மோஹி அகாரா வழக்கு தொடர்ந்தது
1961- அது போல் அந்த இடம் தங்களுடையது என உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியமும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.

ராஜீவ் காந்தி
பிப்.1, 1986- இந்து மதத்தை சேர்ந்த பக்தர்களுக்கு கோயிலை திறந்துவிடுமாறு உள்ளூர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது. இந்த முடிவு எடுத்த போது பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார்.
ஆக.14, 1989- சர்ச்சைக்குரிய இடத்தை பராமரிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
செப். 25, 1990- பாஜக தலைவராக இருந்த எல்கே அத்வானி குஜராத் மாநிலம் சோம்நாத்திலிருந்து ரதயாத்திரையை தொடங்கினார்.

டிசம்பர் 6-இல் மசூதி இடிப்பு
டிச. 6, 1992- கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
ஏப்.3, 1993- அயோத்தியா வழக்கில் குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
அக்.24, 1994- மசூதிகள் இஸ்லாமின் அங்கம் இல்லை என இஸ்மாயில் ஃபரூகி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது.
ஏப். 2002- சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் தொடங்கியது

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மார்ச் 13, 2003- கையகப்படுத்தப்ட்ட நிலத்தில் யாரும் மத வழிபாடு நடத்தக் கூடாது என அஸ்லாம் (எ) பூரே வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மார்ச் 14- வகுப்புவாத நல்லிணக்கத்தை காக்க அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்குகளை முடியும் வரை நிறைவேற்றப்பட்ட இடைக்கால உத்தரவு செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது
செப். 30, 2010- 2:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் சர்ச்சைக்குரிய இடத்தை பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 9, 2011- அயோத்தி நில பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

சு. சுவாமி மனு
பிப் 26, 2016- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரினார்.
மார்ச் 21, 2017- வழக்கு தொடர்ந்தவர்களே சுமுகமாக பேசி முடிவெடுத்துக் கொள்ளும்படி அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜேஎஸ் கெஹர் ஆலோசனை வழங்கினார்.
ஆக 7- அலகாபாத் உயர்நீதிமன்றம் 1994-இல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது
ஆக.8 - சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் மசூதியை கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டில் உத்தரப்பிரதேச ஷியா வக்பு வாரியம் கூறியது.

நீதிபதிகள் நியமனம்
செப். 11- சர்ச்சைக்குரிய இடத்தை பராமரிக்க 10 நாட்களுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இருவரை நியமனம் செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
நவ. 20- அயோத்தியில் ராமர் கோயிலும் லக்னோவில் மசூதியும் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டில் உத்தரப்பிரதேச ஷியா வக்பு வாரியம் கூறியது.
டிச.1- அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-இல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 32 சிவில் உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்
பிப்.8, 2018- சிவில் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க தொடங்கியது.

தலையிட கோரிய
ஜூலை 20- தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது
செப் 27- அக். 29 முதல் இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்துவதால் 5 நீதபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டிசம்பர் 24- ஜனவரி 4-ஆம் தேதி வழக்கு தொடர்பான புகார்களை விசாரணைக்கு எடுத்து கொள்ள சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது.

சுப்ரீம் கோர்ட்
ஜனவரி 4, 2019- வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறித்து ஜனவரி 10-ஆம் தேதி சம்பந்தப்பட்ட அமர்வு உத்தரவு பிறப்பிக்கும் என சுப்ரீம் கோர்ட் கூறியது.
ஜன 8- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் எஸ் ஏ பாப்டே, என்வி ரமணா, யு யு லலித் மற்றம் டி ஒய் சந்திரசூட் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.
ஜன 10- வழக்கு விசாரணையிலிருந்து யு.யு.லலித் விடுவித்து கொண்ட நிலையில் விசாரணையை புதிய அமர்வு முன்பு ஜனவரி 29-ஆம் தேதி மறு திட்டமிடுமாறு கூறினார்.
ஜன. 25- 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூசன், எஸ் ஏ நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு உருவாக்கப்பட்டது.

கையகப்படுத்தப்பட்ட நிலம்
ஜன.29- சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்க அனுமதிக்குமாறு மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கோரியது.
பிப்.20- பிப்ரவரி 26-ஆம் தேதி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது
மார்ச் 6- மத்தியஸ்தர்கள் மூலமாக நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதா வேண்டாமா என்பது குறித்த முடிவை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்தது.
மார்ச் 8- முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது
ஏப்.9- 67 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்க அனுமதிக்குமாறு மத்திய அரசின் மனுவுக்கு நிர்மோஹி அகாரா எதிர்ப்பு தெரிவித்தது.

மத்தியஸ்தர் குழு
மே 9- ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 கொண்ட மத்தியஸ்தர் குழு இடைக்கால அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது.
ஜூலை 18- மத்தியஸ்தம் செய்யும் பணியை தொடருமாறும் அதுகுறித்த முழு அறிக்கையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
ஆக.1- சீலிடப்பட்ட கவரில் அறிக்கையை சமர்ப்பித்தது மத்தியஸ்தர் குழு
ஆக.6- நில பிரச்சினை வழக்கில் தினசரி விசாரணையை சுப்ரீம் கோர்ட் தொடங்கியது
அக்.16- அயோத்தி வழக்கில் விசாரணையை முடித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைத்தது
நவ.9- பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என தீர்ப்பு வழங்கியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications