பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளையும் தண்டிக்க சி.பி.எம். வலியுறுத்தல்!
டெல்லி: பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு வெளியிட்ட அறிக்கை:

நீண்டகாலமாக பிரச்சனைக்குரியதாக இருந்து வரும் அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை மூலம் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மாற்றாக சன்னி வக்பு வாரியம், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அயோத்தி பிரச்சனையை பயன்படுத்தி மதவாதிகள் வன்முறையை தூண்டி பல உயிர்களை காவு கொண்டு வரும் சம்பவங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இத்தீர்ப்பின் மூலம் முடிவு கட்டியிருக்கிறது.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட முடியாது எனில் சட்டப்படியாக தீர்வு காண வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. இத்தீர்ப்பானது நீதித்துறை மூலம் தீர்வை கொடுத்திருக்கிற போதும் சில கேள்விகளும் எழுகின்றன.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. பாபர் மசூதி இடிப்பு என்பது மதச்சார்ப்பற்ற கோட்பாடுகள் மீதான தாக்குதல். அது ஒரு கிரிமினல் குற்றம். ஆகையால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அச்சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எந்த ஒரு மத வழிபாட்டுத்தலம் மீதும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது.
இத்தீர்ப்பை முன்வைத்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications