பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளையும் தண்டிக்க சி.பி.எம். வலியுறுத்தல்!
டெல்லி: பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு வெளியிட்ட அறிக்கை:

நீண்டகாலமாக பிரச்சனைக்குரியதாக இருந்து வரும் அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை மூலம் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மாற்றாக சன்னி வக்பு வாரியம், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அயோத்தி பிரச்சனையை பயன்படுத்தி மதவாதிகள் வன்முறையை தூண்டி பல உயிர்களை காவு கொண்டு வரும் சம்பவங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இத்தீர்ப்பின் மூலம் முடிவு கட்டியிருக்கிறது.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட முடியாது எனில் சட்டப்படியாக தீர்வு காண வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. இத்தீர்ப்பானது நீதித்துறை மூலம் தீர்வை கொடுத்திருக்கிற போதும் சில கேள்விகளும் எழுகின்றன.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. பாபர் மசூதி இடிப்பு என்பது மதச்சார்ப்பற்ற கோட்பாடுகள் மீதான தாக்குதல். அது ஒரு கிரிமினல் குற்றம். ஆகையால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அச்சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எந்த ஒரு மத வழிபாட்டுத்தலம் மீதும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது.
இத்தீர்ப்பை முன்வைத்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications