பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு- லக்னோ சிறப்பு கோர்ட்டில் 2,000 போலீசார் குவிப்பு!
டெல்லி: பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றப் பகுதியில் மட்டும் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1992 டிசம்பர் 6-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பான கிரிமினல் வழக்கில் 28 ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இத்தீர்ப்பை வழங்குகிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்பு வழங்குகிற லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற பகுதியில் மட்டும் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முக்கிய ரயில்நிலையங்கள், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிராவில் உச்சகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரையில் பயங்கரவாதி இமாம் அலி 18-வது நினைவு ஆண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு நாள் என்பதால் 2-வது நாளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications