5 மாநில தேர்தல்.. அரசியல் பேரணிகளுக்கு வரும் பிப். 11 வரை தொடரும் தடை.. சில தளர்வுகளும் அறிவிப்பு!
டெல்லி: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில், பிரசார கட்டுப்பாடுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஓமிக்ரான் காரணமாக தற்போது நாடு முழுவதும் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாகவே நாட்டின் பெரும்பாலான இடங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்த வரும் போதிலும், வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

5 மாநில தேர்தல்
இதற்கிடையே உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் காரணமாகவே 2ஆம் அலை அதிகரித்தாக ஒரு கருத்து உள்ளது. எனவே, இந்த முறை இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் சற்றே முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு வருகிறது. ஓமிக்ரான் அலை காரணமாகத் தேர்தல் பரப்புரைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

நீட்டிப்பு
இந்நிலையில், சில பரப்புரை கட்டுப்பாடுகளை வரும் பிப். 11ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பேரணிகள், பாத யாத்திரைகள், சைக்கிள்/ பைக் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கான தடையைப் பிப்ரவரி 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதர பரப்புரை உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தளர்வுகள்
அதன்படி இனி அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அதிகபட்சமாக 1,000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் முன்னதாக இதுபோன்ற கூட்டங்களில் 500 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்வதிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 10இல் இருந்து 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல உள்ளரங்குகளில் நடைபெறும் கூட்டங்களில் 500 பேர் அல்லது அரங்கின் முழு கொள்ளவில் 50% வரை மக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை
கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஐந்து மாநிலங்களின் சுகாதார மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறுகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் கொரோனா பாதிப்பு நிலையைக் கருத்தில் கொண்டே தளர்வுகள் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

5 மாநில தேர்தல்
இந்த 5 மாநில தேர்தல் மொத்தம் 7 கட்டங்களை நடைபெறுகிறது. அதிகபட்சமாக உ.பி-இல் 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மணிப்பூர் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications