அந்த ஒரு தடுப்பூசி.. இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணம்.. ஆய்வில் அசத்தல்
டெல்லி: பி.சி.ஜி தடுப்பூசி (BCG vaccination) பாலிசி இல்லாத நாடுகள் கோவிட் -19 பாதிப்பால், பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் இறப்பை சந்தித்துள்ளன என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
Recommended Video
178 நாடுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.
பி.சி.ஜி. என்பது பேசிலஸ் கால்மெட்-குய்ரின் என்ற பெயரின் சுருக்கமாகும். காசநோய் அதாவது TB க்கான தடுப்பூசி இது ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளுக்கு, பிறந்த உடனேயே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

பாலிசி இல்லை
அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஹாலந்து போன்றவை பணக்கார நாடுகளாக இருக்கலாம், ஆனால், ஒருபோதும் பி.சி.ஜி தடுப்பூசி பாலிசியை அவர்கள் வைத்திருக்கவில்லை.

10 மடங்கு குறைவு
178 நாடுகளில் மார்ச் 9 முதல் 24 வரை 15 நாட்களுக்கு கோவிட் -19 நிகழ்வுகளையும் இறப்பையும் இந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது. "பி.சி.ஜி தடுப்பூசி உள்ள நாடுகளில் கோவிட் -19 இன் பலி எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 38.4 ஆக இருந்தது, இந்த தடுப்பூசியை பரவலாக்காத நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு, 358.4 என்ற அளவில் அதிகமாக இருந்தது.

இந்தியா அசத்தல்
பி.சி.ஜி யின் பாதுகாப்பு விளைவை நாங்கள் எதிர்பார்த்தோம் என்றாலும், பி.சி.ஜி தடுப்பூசி உள்ள மற்றும் அது இல்லாத நாடுகளுக்கு இடையேயான பலி எண்ணிக்கை வித்தியாசம், கிட்டத்தட்ட 10 மடங்கு இருப்பது, மகிழ்ச்சியுடன் ஆச்சரியமாக இருந்தது, என்கிறார் டாக்டர் ஆஷிஷ் காமத்.

நுரையீரல்
டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் சிறுநீரக புற்றுநோயியல் (அறுவை சிகிச்சை) மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி பேராசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். காச நோய் என்பது நுரையீரல் தொடர்பானது. கொரோனா வைரசும், நுரையீரலை தாக்கக் கூடியது. எனவே, காச நோய் தடுப்பூசி, மக்களுக்கு வலிமை சேர்க்கிறது என்று மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications