டெல்லிக்குள் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரை.. ராகுலின் பாதுகாப்பில் குளறுபடி.. அரண் போல வந்த தொண்டர்கள்
டெல்லி: வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமைப்பயணம்' என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது டெல்லிக்குள் அவரது பாத யாத்திரை நுழைந்துள்ள நிலையில், பாதயாத்திரையில் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு வழங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாதுகாப்பில் காட்டப்பட்டு இருக்கும் அலட்சியம் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்கிறார்.
இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார்.

108-வது நாளில் பாத யாத்திரை
ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரையில் வழிநெடுக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று வருகின்றனர். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு புது உத்வேகத்தை ராகுலின் பாத யாத்திரை அளிக்கும் என்று அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுமார் 3 மாதத்திற்கும் மேலாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியி பாத யாத்திரை இன்று 108-வது நாளை எட்டியுள்ளது.

டெல்லியில் நுழைந்த யாத்திரை
ஹரியானா மாநிலத்தில் இருந்து பத்ராபூர் வழியாக தலைநகர் டெல்லிக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை நுழைந்தது. முன்னதாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ராகுல் காந்தி பாத யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் பாத யாத்திரையை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்து இருந்தது.

ராகுலுக்கு உற்சாக வரவேற்பு
தலைநகர் டெல்லிக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நுழைந்ததும், இந்த யாத்திரையில் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். முகக்கவசம் அணிந்தபடி சோனியா காந்தி ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரைக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் பெரும் அளவில் திரண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாதுகாப்பில் குளறுபடி
ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவரை யாரும் எளிதில் நெருங்கிவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரமாக இருக்கும். குறிப்பாக ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் போது அவரை சுற்றிலும் கயிறுகள் பிடிக்கப்பட்டு இருக்கும். யாரேனும் திடீரென்று உள்ளே வந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடக்கூடாது என்ற அடிப்படையில் இத்தகைய பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி
ஆனால், இன்று டெல்லியில் நிலைமை தலைகீழாக இருந்தது. வழக்காமாக போலீசார் பாதுகாப்பு அணிவகுத்தபடி வருவதை காண முடியும். ஆனால், டெல்லியில் அத்தகைய பாதுகாப்பு ராகுலுக்கு வழங்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். கட்சி தொண்டர்களே ராகுலுக்கு பாதுகாப்பாக இருபுறமும் அரண் போல அணிவகுத்து வந்தனர்.

ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு
தலைநகர் டெல்லியில் காவல்துறையின் கட்டுப்பாடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசம் உள்ளது கவனிக்கத்தக்கது. டெல்லியில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று காலை ராகுல் காந்தியின் பாத யாத்திரை அப்பல்லோ மருத்துவமனை அருகே வந்த போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதைக் கவனித்த ராகுல் காந்தி ஒரு நிமிடம் தனது யாத்திரையை நிறுத்தினர். அங்கிருந்த தொண்டர்களையும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அறிவுறுத்தினார்.

12 மாநிலங்களை கடந்து
இதையடுத்து ஆம்புலன்ஸ் எந்த சிரமும் இன்றி அப்பகுதியை கடந்து சென்றது. ராகுல் காந்தியின் இன்று 23 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபயணமாக சென்று டெல்லி செங்கோட்டையை அடைகிறார். ராகுல் காந்தி இதுவரை 12 மாநிலங்களை கடந்து டெல்லி வந்துள்ளார். அதாவது 108 நாட்களில் 3 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications