பீகார் தேர்தல் பணிகள் முழு வீச்சில்... உரிய காலத்தில் நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே டிவிக்கு சுனில் அரோரா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும். உரிய காலத்தில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும். அம்மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Bihar Assembly elections 2020 will be held as per schedule, says CEC Sunil Arora

தற்போதைய கொரோனா காலத்தில் வாக்காளர்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்ய வேண்டி இருக்கிறது. ஆகையால் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தூய்மைப்படுத்துதல், முக கவசங்கள், கையுறை அணிவது ஆகியவை குறித்த வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படும்.

ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர்கள் ம்ட்டுமே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 33,797 வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் 678 முதல் 985 வாக்காளர்கள் மட்டுமே ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிப்பார்கள்.

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுவால் பணியாளர்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதற்கேற்பவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா காலத்திலும் கூட பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்துவகை டிஜிட்டல் யுக்திகளையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும். இவ்வாறு சுனில் அரோரா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+