Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் பதவியை துறக்கும் நிதிஷ்? பாஜக ஆடும் பவர் கேம்.. இறுதியானது பீகார் அமைச்சரவை.. முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகாரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வென்றது. ஜேடியு மற்றும் பாஜக என இரு கட்சிகளுமே அதிகப்படியான இடங்களில் வென்ற நிலையில், எந்தக் கட்சிக்கு அமைச்சரவையில் எத்தனை இடம் என்பது இறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், முதல்வர் பதவியில் யார் தொடர்வார் என்பதிலும் தெளிவு கிடைத்துள்ளதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, கடந்த 14ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. என்டிஏ கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்திருந்த நிலையில், அந்தக் கூட்டணியில் இருந்த பாஜக, ஜேடியு என இரு கட்சிகளுமே கிட்டத்தட்ட சம அளவு சீட்களை பெற்றது.

Bihar Cabinet NDA Power-Sharing Deal BJP Secures 15 Key Posts JDU 14 Nitish Kumar Retains CM

இறுதியான பீகார் அமைச்சரவை

இதனால் பீகாரில் அடுத்த முதல்வர் யார்.. அமைச்சரவையில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் எனப் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கிடையே பீகாரில் அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய பீகார் அமைச்சரவையில் பாஜகவுக்குக் கணிசமான பிரதிநிதித்துவம் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் யார்!

அதேபோல முதல்வர் யார் என்பதிலும் அங்குக் கேள்வி நிலவி வந்தது. வாக்குப்பதிவுக்கு முன்பு என்டிஏ கூட்டணி யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.. அமித் ஷா கூட தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் இணைந்தே முதல்வரை தேர்வு செய்வார்கள் என கூறியிருந்தார். இதனால் முதல்வர் பதவி மாற்றப்படுமோ என்ற கேள்விகள் எழுந்தன. இருப்பினும், முதல்வர் பதவியில் நிதிஷ் குமாரே தொடர்வார் என பீகார் என்டிஏ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் இது தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தான் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி அமைச்சரவையில் பாஜகவுக்கு சுமார் 15 முதல் 16 இடங்கள் கிடைக்கும். அதேபோல ஜேடியுவில் இருந்து சுமார் 14 பேர் அமைச்சராகப் பதவியேற்பார்கள்.

இதர கட்சிகள்

இரு கட்சிகளைத் தவிர்த்து என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன் சக்தி 19 இடங்களை வென்றிருந்தது. அந்த கட்சிக்கு மூன்று அமைச்சரவைப் பதவிகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல 5 இடங்களை வென்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் 4 இடங்களை வென்ற ராஷ்ட்ரிய லோக மோர்ச்சா கட்சிகளுக்குத் தலா ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகாரில் என்டிஏ மொத்தம் 202 இடங்களில் வென்றன. குறிப்பாக பாஜக 89 இடங்களையும், ஜேடியு 85 இடங்களையும் கைப்பற்றின.

மற்ற கட்சிகள்

ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் மூன்று இடதுசாரி கட்சிகள் அடங்கிய 'மகா கூட்டணி' அங்கு 35 இடங்களில் மட்டுமே வென்றது. ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், காங்கிரஸ் 6 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணியில் இருந்த இதர கட்சிகள் 3 இடங்களில் வென்றன. முன்னாள் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி ஐந்து இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+