வாட்ஸ்அப் பேஸ்புக் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கு என்கிறார் ராகுல்காந்தி- ரவிசங்கர் பிரசாத் பதிலடி
இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செயலிகள் ஆர்எஸ்எஸ், பாஜ கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் இவற்றின் மூலம் வாக்காளர்களை கவருவதற்காக வெறுக்கத்தக்க, போலி செய்திகள் பகிரப்படுகின்றன என
டெல்லி: இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செயலிகள் ஆர்எஸ்எஸ், பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார். இதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செயலிகள் ஆர்எஸ்எஸ், பாஜக கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் வாக்காளர்களை கவருவதற்காக வெறுக்கத்தக்க, போலி செய்திகள் பகிரப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தனது டிவிட்டர் பதிவின் மூலம் உடனடியாக பதிலடி கொடுத்தார். ட்விட்டர் பக்கத்தல் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது கட்சியில் உள்ளவர்களிடமே செல்வாக்கை பெற முடியாத தலைவர், உலகம் முழுவதும் பாஜக ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகிறார்.

தேர்தலுக்கு முன்பே, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா, பேஸ்புக்கை பயன்படுத்தி தகவல்களை பெற்ற விவகாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டவர், தற்போது எங்களை கேள்வி கேட்பதா?,' என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications